பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


கண்கள் ஊடாமல், எண்டிசைவைத்தும் - வன் கையை இடபுற வானில் வைத்தும்- அறம் புரிந்து இன்ப அறிவு சூடினார்.

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்-கந்தக வீட்டின் கனவின் கொள்ளிகள்.

'சாதிக்குச் சாவு மணியடிக்கப் பழம் நிகர்த் தமிழகம் வையத் தலையாய் அமையத் தொடங்குக அறம்' என்றேன்.

அறத்தை மறந்தவர்கள் இதைக் கேட்டதும், வாள் கண்ட கோழைகளைப் போல் நடுங்க ஆரம்பித்தனர்.

தமிழர்களின் எழுதுகோலுக்குச் சில அறிவுரைகளைச் சொன்னேன்.

பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச் சொல்க.

புன்கருத்தைச் சொல்வதில் ஆயிரம் வந்தாலும், அதற்கு ஒப்ப வேண்டாம்.

'அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால், எதிர்ப்பதொன்றே தமிழன் எழுதுகோல் வேலை.

இதனைக் கேட்டதும் எழுத்தாளர்கள் சிலர் என் மீது சீறி விழுந்தனர். - சிலர் என்னையும் மீறினர்-இறுதியில் தோற்றனர்.

புரட்சியால் உலகம் புது விழி கொண்டு - வரட்சியான அறிவைப் பார்த்துக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது.

வைதீக வாய்க்கால் ஒரம் சில பூண்டுகள் முளைத்தன.

அவற்றைப் பார்த்து சீர்திருத்தக் கருத்துக்கள் சிரித்தன.

புரட்சிக் கருத்துக்கும் சீர்திருத்தக் கருத்துக்கும் நான்தான் மூலம் என்று தெரிந்தவுடன், பாரதியார் மேல் பாய்ந்த அம்பு என் மீதும் பாய ஆரம்பித்தது.

ஈரோட்டுப் பாதை எடுப்பான பாதை. நேர் வழியில் செல்பவனுக்கு அப்பாதை சீர்வழி காட்டுகிறது.

அந்தப் பாதையில் விளைந்திருக்கும் அற்புதச் சக்திகள் மனிதனைச் சிறை பிடிக்கிறது.

விரைவான முன்னேற்றத்திற்கு அது வித்து.

174