பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


நல்ல வாழ்க்கைக்கு அது பலம் தரும் சத்து.

இதுவரையில் இப்படி எவனும் சொல்லாத கருத்து முத்து.

அந்த முத்துக்களை நான் பொறுக்க ஆரம்பித்தேன் ஆரமாகக் கோர்த்தேன். அதை என் அன்னைத் தமிழுக்கே சூட்டினேன்.

தமிழின் வேரிலே வீழ்ந்த நச்சு நீரை அகற்ற ஆரம்பித்தேன்.

பழமையான - தூயக் கருத்துக்களை நீராகப் பாய்ச்சினேன்.

அது இலக்கிய உலகத்தில் மாபெரும் திட்பத்தை உண்டாக்கியது.

எனது எல்லா யாப்புகளிலும் சிக்கிய பாடல்கள் - தமிழுக்கு அணியாக விளங்குகின்றன.

புதிய கற்பனைகள் -
பதிய கவிதைகள் -
கவிதையில் புது பாணி!
செந்தமிழ்ச் சொல் ஆராய்ச்சி !
திருக்குறளுக்கு உரை!
சிற்றிலக்கிய விருந்துகள்!
பேரியக்கியப் படைப்புகள்!

இவை எல்லாம் என்னிடமிருந்து வரிசை வரிசையாகப் புறப்பட்டன.

தமிழன் உயர்வுக்காக ஆக்கப்பட்ட அறிவு நூல்கள் அத்தனையையும் - தமிழகத்திலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

மொழி ஆதிக்கம் மேலோங்கி நின்று, தமிழின் விழி வரையில் கை நீட்டுகின்ற அளவுக்கு நம்மை வளமாக வளர்த்தது.

எதிரிகளின் விதண்டாவாதங்கள் - குறுகிய சோகங்கள் - தமிழைக் குப்புறக் கவிழ்ப்பதற்காகப் படையெடுத்து வந்தன.பொய்த்தது கோபம்! பூட்டிய இரும்புப் கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

175