பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


"பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப் போல, எனதுள்ளம் திறக்கப்படும் போதெல்லாம், என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன." இஃது எடுத்துக் காட்டு நடை.

"கதிரவனே! அடிவானத்தில் நீ தொட்டில் இட்டுக் கொண்டிருக்கிறாய்!

வானத்தின் சிம்மாசனத்தில் நீ மதியத்தில் அமருகின்றாய்! அந்தி நேரத்தில் கண் சிவந்த வீரனைப் போலக் காட்சி தருகிறாய். உனக்கிருக்கும் சண்பால் இரவில், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகிறாய்!” - கற்பனை நடைக்கு இஃது ஒரு காட்டு.

"தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் வாழும் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு வானம் போன்ற கூடை கிடைக்காது.” உருவக நடை இது.

எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் அறிஞர் அண்ணாவே என்ற எண்ணம்தான்.

அண்ணா,
கடிக்க நனி சொட்டும் கரும்பு!
மோப்ப மணக்கின்ற மலர்!
கேட்கப் பரவி வரும் இசை!
நோக்க எழிலீயும் காட்சி!
உணரச் சுகம் தரும் தென்றல்!

என ஐம்புலன்களையும் ஆட்கொள்பவர் அண்ணாவே என்றும் புகழ் மாலையைச் சூட்டி நண்பர் என்.வி.கலைமணி போற்றிப் பரவுகின்ற தமிழ் அஞ்சலியே இந்நூல்.

அவருடைய அஞ்சலி என்ன? அவரே சொல்கிறார்"கொம்புத் தேனும் செழும் பாகும் குலவும் பசும் பாலும் கூட்டி உண்டார் போல் இனிக்கும் குணம் கொண்டவனே!

16