பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


நெடும்புனல் வீங்கி வீங்கி
நெகிழ்ந்துயின் நீராய் பொங்கிப்
படுக்கிற பான்மை போல
பைந்தமிழ்க் குமிழை நெஞ்சில்
தொடுக்கிற சுப்பிரமண்யம்
தொடுகிற பண்பைக் கொண்டார்
வடுவிலா அன்பைப் பூக்கும்
வனப்புள வனத்தான் வாழி.


அருட்டிரு சுவிசேச முத்து
அவர்கட்கு வணக்கம்

கவிஞர்கள் விரவி வைத்த
கவிதையில் இயேசு நாதர்
குவியேழிற் பிழம்பில் சிக்கிக்
களித்திட நினைத்து ஞான
சுவிசேச முத்து இந்த
சுடர்க்கவி அரங்கம் கூட்டி
புவியினை வளைத்துக் கொண்ட
புதுமையே புதுமை யென்பேன்.


அவையோர்க்கு வேண்டுகோள்

அஞ்சுகம் புலம்பும் ஓசை
அடுத்துள மலர்த்துக் கத்தைக்
கொஞ்சமாய் நெகிழ்ந்து நாத
கூட்டிலே கிடக்க வைக்க
செஞ்சதைப் போல நானும்
செய்யவே கவிதை மீட்டி
கொஞ்சிட வந்தேன் நீங்கள்
குவிமலர், விழிப்பாய்க் கேளீர்


வேறு

இயேசு ஒரு சீர்திருத்தவாதி

இயேசுஓர் சீர்திருத்தச் செம்மல் என்ற
இலக்கணத்தின் இலக்கியமாய் பாட வந்தேன்

180