பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



"என்நிமித்தம் நீங்களெல்லாம் துன்பப் பட்டால்
என்நிமித்தம் நீங்களெல்லாம் பழிசு மந்தால்
புண்பட்டுப் போகாதீர் களிகூறுங்கள்
பொல்லாதோர், உங்களுக்கு முன்பிருந்த
நன்மைசெய் ஞானவானை இப்ப டித்தான்
நடுநடுங்கச் செய்தார்கள்!" என்று சொன்னார்.
இன்றல்ல, என்றுமிந்த உபதேசங்கள்
இறவாத சீர்திருத்த இதயப் பேச்சே!

ஆயக்கா ரர்பாவி இவர்களோடு
அமர்ந்திருந்தார் பந்தியிலே! அதனைக் கண்டு
வாயவிழ்த்தார் பரிசேயர்! "என்ன உங்கள்
போதகரே பாவியோடு விருந்துண்கின்றார்
நோயாளி களுக்கன்றோ மருத்துவர்கள்
இரக்கத்தை நாடி வந்தேன்! பாவி யைஅல்ல
தேயக்கால் நடப்பதெல்லாம் பாவி கட்கே
நிதிமானைத் தேடியல்ல!” என்றார் இயேசு!

இயேசுநாதர் சீடரினை அழைத்துச் சொன்னார்
“என்னுடைய அதிகாரத் தாலே நீங்கள்
பாசமுள்ளோர் வியாதிகளைக் குணமாக்குங்கள்
பணமட்டும் வாங்காதீர்” என்று ரைத்தார்
மாசற்ற சீர்திருத்த வாதி செய்யும்
மறுமலர்ச்சி இதுவன்றி வேறே தேனும்
தேசத்தில் கண்டதுண்டோ! "பணங்கா சுக்குச்
சேவையினைச் செய்யவேண்டாம்” என்றார் இயேசு!

அருள்முளைத்து பாவத்தின் வேரை வெட்டி
அப்பழுக்கை நீக்குமிடம் கோயில்! அங்கே
பொருள்கறக்கும் வாணிகர்கள் குவிந்து மக்கள்
புத்தியினைத் திசைத்திருப்பி கொள்ளை கொள்ளும்
திருடரினை இயேசுகண்டார்! பிரம்பெடுத்தார்
சிற்றினத்தை விரட்டிவிட்டார்! தெய்வ நாட்டம்
பெறுகின்ற வழிசொன்னார் சீர்த்தி ருத்த
பேரின்ப தாள்திறந்தார் இயேசு பெம்மான்!

182