பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி



ஏழைக்கும் கோழைக்கும் எடுத்தார் கையில்
இளைத்துருக்கும் பிள்ளைக்கும், தன்னைக் காக்கா
பாழைக்கும் பதங்குலைந்த வாழ்வில் சிக்கிப்
பரதவிக்கும் மோழைக்கும், நோயில் மாட்டி
ஈழையிலே சிக்குண்ட பிணியா ளர்க்கும்
இதயத்தைத் திறக்கின்ற நெஞ்சம் உண்டா?
பாழடைந்த கண்ணுக்கோர் ஒளியை ஊட்டப்
பணிசெய்யும் சீர்திருத்தம் எங்கே? எங்கே?


மேல்மட்டச் சீர்திருத்தம் மிகமட் டத்தில்
வேக்காட்டில் சாக்காட்டில் இருப்பவர்க்கு
கோல்கொடுக்க கைகொடுக்க வருமா என்றால்
குச்சுவீட்டில் நுழையாது மச்சு வீடு
பால்குடிப்போர் சீர்திருத்தம் உப்பே இல்லா
பழங்கஞ்சிக் கலயத்தில் நுழைவ தில்லை
கால்இருப்போன் முடவனுக்கு வழியைக் காட்டும்
கால்வழியில் பணக்காரன் வரவே மாட்டான்.


வாடையிலே வாடுகின்ற மனித ருக்கு
வெதவெதப்பு தருகின்ற இதயச்சூடு
கோடையிலே வசந்தத்தால் வந்த சூடு
கொடுப்பவனோ தெய்வத்தால் பிழிந்த சாறு.
பாடயிலே குழைகின்ற நாத நீட்டம்
பனிபடுத்த படுக்கையிலே மிதந்த சூடு
நாடயிலே அதைக்காண்போம் அந்தச் சூட்டை
நல்குகின்ற சீர்திருத்தம் செய்தவர் யார்?


பணம்படைத்தோர் சமுதாயச் சகதிச் சேற்றில்
பாதத்தை ஊன்றாமல் மேலி ருந்தே
தினம்செய்யும் சீர்திருத்தம் உண்டு! ஆனால்
தெருப்புழுதி யோடிருக்கும் ஏழை யோடு
மனம்ஒன்றி ஏழையாக மாறிக் கேட்டை
மாற்றுகின்ற சிர்திருத்த வாதி உண்டு.
குணம்நல்லக் குணங்கொண்ட இயேசு நாதர்
ஏழையாகி சீர்திருத்தம் குவித்தச் செம்மல்

183