பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


அண்ணனுக்கும் தம்பிக்கும் தாய்தந் தைக்கும்
அளந்து வைத்த உறவைவிட இறைவனுக்கும்
மண்ணுக்கும் இருக்கின்ற உறவு நல்ல
உறவென்று சீர்த்திருத்த இயேசு சொன்னார்.

இடையரினை மூன்றுராஜா சந்தித்தார்கள்
இயேசுநாதர் உங்களுக்குப் பிறந்துவிட்டார்
விடைகாண முடியாத வினாவுக் கெல்லாம்
விடையளிக்க வந்துவிட்டார் என்று சொன்னார்
கடைநிலையில் இருப்பவரைத் திருத்து தற்கே
கிருத்துவந்தார் என்றெழுதி இருப்ப தாலே
படையலிட்டார் சீர்த்திருத்தம் அதனால் ஞானப்
பிதாவுக்குப் பிள்ளைகளை அளித்தார், காத்தார்.

உலகத்தில் அவர்செய்த சீர்தி ருத்தம்
உள்ளிருக்கும் ஆத்மாவின் சீர்த்தி ருத்தம்
கலகத்தின் கண்ணிரின் கேடு பாட்டின்
கலக்கத்தின் காரணங்கள் எங்கி ருந்து
இலங்குகின்ற தென்றவரும் கண்டு பூமி
இன்னலுக்குப் பொன்மொழிகள் உதிர்த்தார்,இந்த
உலகத்தை ஆதாய மாக்கினாலும்
ஆத்மாவை இழந்துவிட்டால் பயனே தென்றார்!

தனையழித்துப் பிறர் வாழ சீர்த்தி ருத்தம்
தரணியிலே விரவியவர் இயேசு நாதர்
முனையொடியா சீர்த்திருத்தம் பொதுநலத்தின்
முழுமைக்குள் முளைப்பதாலே! இயேசுநாதர்
வினையெல்லாம் பிறர்க்கு நன்மை செய்யும்
வினையாக மாற்றினார்கள் அவரின் நெஞ்சில்
சினையளவும் மாசுதூசு இருக்கவில்லை
சீர்த்திருத்த பரிசுத்த ஆவி ஏசு!

185