பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்




சிலம்பு, மேகலையின் ஒலியும் ஒளியும் ஊட்டும் இவர் நடையில்,

எப்பொருள் எடுத்தாலும், அப்பொருளின் முப்பரிமாணத்தையும்,

தப்பின்றிக் காட்டும் முப்பட்டை ஆடியின் அடவும், இவர்

பண்ணிசை அய்யன் திருவள்ளுவர் மாலையில் வண்ணமிடும்.

சொல்வலை வேண்டு வனான புலவர் கலைமணியின் இந்த

நல்ல நூலில், மெல்லிய இனிய மேவரு கருத்துச் சிற்பத்தின் சொல்லின்பத்தினை இனி நீங்கள் துய்க்கலாம்.

அன்பன்,
த.கோவேந்தன்,
24.4.99