பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


கவித்து வத்தைக்
கடவுளின்
கொடையாகப் பெற்றவன்தான் -
கவிஞனாக முடியும்!

புலவனாகவும் -
கவிஞனாகவும் -
மலர்ந்து நிற்பவர் -
கலைமணி!

நிறையக்
கற்றிருந்தும்
நிறை குடமாக
நிற்பதாலேயே -
கலைமணியை
நான்
காதலிக்கிறேன்!

இந்த நூல் -
நூல் நிலையங்களில் மட்டும்
கால் பரப்பப்
படைத்தது அல்ல -

நம் -
நெஞ்ச அலமாரியில்
நெடுங் காலம் -
வைத்திருந்து

அவ்வப்போது
வாசித்துப் பார்க்க வேண்டிய
வண்ணக் காவியம்!

இந்த நூலைப்
படித்து விட்டு
எனககுச
சொல்லத் தோன்றுவது
இதுதான்.


33 முதல் தெரு, கற்பகம் அவின்யூ,
சென்னை - 28

அன்பன்
வாலி

28