பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி


இலட்சியங்களாக இருந்தும்கூட, அவற்றைத் தத்துவமேதை அரிஸ்டோட்டில் தமது நூலிலே குறிப்பிடவில்லை.

தமிழ் அற நெறியாளரான அய்யன் திருவள்ளுவர், இந்த மூன்றையும் மிக வலிமையாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளர்.

அவருடைய அருமையான செய்யுள்களுக்கு - இவை தாம், ஆய்வுப் பொருட்களாக உள்ளன. எனவே, நாம் இந்தத் தமிழ்க் கவிஞரை ஒரு கிறித்துவன் என்றே அழைக்கலாம்.

-அருட்டிரு டாக்டர் ஜி.யு.போப்.

"Humility, Charity and Forgiveness of injuries, being Christian qualities are not described by Aristotile... Now these three are forcibly inculcated by the Tamil Moralist These are the themes of his finest verses. So far, then we may call Tamil Poet a Christian”

-Rev. Dr.G.U.POPE

"கிறித்துவத்தின் தேன் சிந்தும் மலர்களெனக் கருதப்பட்ட அந்த மூன்று இலட்சியங்களையும், பல்கலை வித்தக மேதை அரிஸ்டோட்டில் என்பவராலேயே அவரது நூல்களில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், ஒரு தமிழ்க் கவிஞரால் அருமையாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளதால், நாம் அவரை ஒரு கிறித்துவன் என்றே அழைக்கலாம்” என்றாரே தவிர, அய்யன் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர்தான் என்று வலியுறுத்திக் கூறவில்லை.

திரு. டாக்டர் போப் அவர்கள், கிறித்துவத் திருமறைக் காவலராக இருந்ததனால்தான், May Call என்ற வார்த்தையை ஆண்டுள்ளார்.

ஒரு மத எல்லையின் காவலராகக் கருதாமல் - உலக மக்கள் மத எல்லையின் பொறுப்பாளராகத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார்!

அறிவை அலைக்கழித்துவிட்டு, பொருளை நாடிச் செல்லும் கிறித்துவ மதவெறியர்கள், அமைதியாக வாழும் தமிழ் மக்களிடத்திலே மதச் சர்ச்சைகளை எழுப்பி, கலங்கிய நீரிலே கயலைத் தேடி ஆதாயம் பெறப் பார்க்கிறார்கள்.

39