பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


ஓடாமல் நிற்கின்ற அடிவானம்!
காதலுக்கு ஊஞ்சலாட்டும் தென்றல்!

இவை கவிஞன் ஒருவனது சிந்தனைகளை வளரவைக்கும் ஆசான்களாகும்!

ஆனால், அவை அய்யன் திருவள்ளுவனாருக்கு ஆசான்களாக மட்டுமல்ல, அறிவின் ஆணிவேர்களாகவே அமைந்து விட்டன!

இயற்கை தரும் இந்தத் தத்துவங்களை விட்டுச் சிறிது மாறி இருந்தால், அவர் கோயில்களிலே உள்ள சிற்பங்களின் பக்கத்திலே நின்று கொண்டு பதிகங்களைப் பாடியிருப்பார்!

அவரைச் சுற்றிச் சுற்றி வளையம் போட்டது மனிதனுடைய வாழ்க்கையே தவிர, சொர்க்கமும் - நரகமும் அல்ல! புண்ணியமும்- பாவமுமல்ல! நல்வினையும்-தீவினையும்தான்.

அய்யன் திருவள்ளுவரைத் தட்டிக் கொடுத்து எழுது என்று கூறியது, அவரது நண்பர்களும், வாழ்ந்த ஊரும் - சுற்றுச் சார்பான சூழ்நிலைகளும், வாழ்க்கைத் துணைவியுமாகும்.

தேனைச் சேகரிக்க வண்டுகள் நெடுந்துாரம் ஒடுவனபோல, ஒரு மனிதன் உண்மையைச் சேகரிக்கவும் மக்கட் சமுதாயத்தில் ஒடி அலைய வேண்டி இருக்கிறது!

மனோ வேகத்தை மட்டும் சற்று அதிகமாகவே ஒட்ட ஆரம்பித்தால் அதை மிக மிக விரைவு படுத்தினால், நிலவைக் குத்தி, விண்மீனை ஊடுருவி, பரிதியைத் துளைத்து அண்டத்தில் போய் தைத்து விடும்!

கண்கள், முகத்திலே மட்டுமல்லை - அகத்திலேயும் உண்டு! அதைத் தியானம் என்று வைதீகம் கூறினால், உள்ளொளி என்று அய்யன் திருவள்ளுவர் வரம்பு கட்டுகிறார்.

தமிழ்ச் சமுதாயத்தில் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எப்போதாவது ஒரு முறை குறைந்துவிடுமானால், அப்போதே நாம் அழிந்து விடுவோம் என்ற அச்சம் அவரிடம் அதிகரித் திருந்தது!

அவை அழியக் கூடாது என்று அவர் கருதியதால்தான், தமிழ்ச் சமுதாயத்தை அழிக்காமல் இருக்கக் கூடிய கற்பூரத்தைத் தயாரித்தார்! அக் கற்பூரம் என்ன தெரியுமா?

43