பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

,

மனிதப் புனிதன்
காந்தியண்ணல்


ன்பில் கவர்ச்சி
உண்மையில் பற்று,
பண்பில் நேர்மை,
ஒழுக்கத்தில் கட்டுப்பாடு,

இன்றைய சரித்திர உலகம் - இத்தகைய ஒரு மாமனிதரைக் காந்தியடிகள் என்று இயம்புகிறது.

மனித வர்க்கம், எப்படியோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, இயற்கையின் விளைவுகளால் தேய்வுற்று, அணுக்களாகப் போகட்டுமே என்று எண்ணுகின்ற நெஞ்சத்தின் பெயர் கயமையாகும்.

ஆனால், இனி பிறக்கும் கருவிற்கு மனித வர்க்கம் நீங்காத் துணையாக நிற்க வேண்டுமென்று, ஓங்கிய எண்ணத்தினால் கடனாற்றப் புறப்பட்ட சில புனிதர்கள், கல்லறைக்குப் பின், சடங்காக அல்ல - சத்தியமாக நிற்கிறார்கள்.

அரசியலில் அடிமைப்பட்ட இந்தியா-கலாச்சாரத்தால் கண் திறந்து, ஒருமைப் பாட்டால் உணர்வைப் பெற்று நாகரிகத்தால் நடமாடிடும் சக்தி இருந்தும், எண்ணெயில் போட்ட கரிவேப்பி லையாகச் சுருங்கி இருப்பது - ஏன், என்று காந்தி அடிகள் கண்டார் கேட்டார்!

தோலின் நிறத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதனுடைய ஆத்மத்தை எடை போடுகின்ற கீழான பண்பு - வெள்ளையனிடம் இருந்தது.

முள்ளம்பன்றியைப் போன்றிருக்கும் பலாப்பழம் - நல்ல சுவை மிக்க சுளைகளை உள்ளே கொண்டிருக்கிறது.

49