பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


கரிய நிறமும்-வெள்ளை நிறமும்-மஞ்சள் நிறமும், பேரொளியின் சிதறல்களே தவிர, வேற்றுமைக்கென்றே விதைக்கப்பட்ட வண்ணங்கள் அல்ல.

முப்பட்டைக் கண்ணாடியின் வழியாக சூரியனை பார்க்காமல் இருந்தால், சூரியன் நிறம் வெள்ளைதான். பெருக்கெடுத்து ஒடி வருகின்றபேரொளி, தட்ப-வெட்ப நிலையினால் உயிரினத்தைப் பாதுகாக்கும் தோலை நிறமாக்கி மகிழ்கிறது.

எல்லா மலர்களும் - ஒரே நிறமாக இருந்தால் - பூக்களின் பலவீனம் தெரியும்.

மஞ்சள் நிறம் மட்டும் இல்லையென்றால் - கண்நோய் தீருவது கிடையாது.

பச்சைநிறம் மட்டும் இல்லையென்றால்-இரத்தச் சுரப்பிகள் வேலை செய்யாது.

சிவப்பு நிறம் எப்போதுமே இருந்தால் மிரட்சி எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.

ஊதாநிறம் ஒன்றாலேதான்-இந்த உலகம் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கருமை நிறம் - மிகத் தேவையானது என்று - வைதீகன் சொல்லுகிறான் - பார்வையுடன், நேர்க்குத்தலை ஒடுக்கி மடக்குவதற்காக.

ஆகவே, நிறத்துக்குள் இருக்கின்ற நிரந்தரமான வரலாற்றை விஞ்ஞானத்தோடு விளையாடுகின்ற வெள்ளைக்காரனின், கந்தலான இதயத்தைக் கொண்டு கணக்கிடும்போது - கறுப்பர்கள், சாத்தானின் படைப்பாக அவன் கண்கட்குத் தெரிந்தார்கள்.

காந்தியடிகளின் ஞான விழி, வெள்ளையனை அக்கக்காய் ஆராய ஆரம்பித்தது.

ஒரு கோடி முத்தத்தால் உருவான ஓர் உயிரை, துப்பாக்கி யால் துளைத்து ஆளலாம் என்று நினைத்தான்- வெள்ளைக்காரன்.

முத்தம் - பயங்கரமான ஒலியல்ல. மென்மையான அந்த மெல்லோசையால் - பைபிளை அருள் வீழ்ச்சியால் பொழிந்த- இயேசுவே உருவானார்.

50