பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


உலகை உலுக்கிக் குலுக்கிய மாவீரன் இட்லரைப் போல, செருப்புத் தைக்கும் தொழிலையும் செய்தார். ஒவியப் புலவன்ாகவும் இருந்தார்.

மாண்பு பெறப்போகும் மாணவர்கள் மனதின் ஆசுகளை அகற்றிய டாக்டர் ராதா கிருஷ்ணனைப் போல ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வீராங்கனை ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல, நலிந்த நோயாளிகளுக்கு உரிய பணிவிடைகளைச் செய்யும் நர்ஸாகவும், செவிலியாகவும் - பணிபுரிந்தார்.

தனது துணைவியான அன்னை கஸ்தூரிபாயின் துணிகளைத் தைத்துத் தந்தார். அதே போல சர்தார் வல்லபபாய் படேலுக்கும் - இந்திய சுதந்திரத்துக்கும் - எதிரியான வெள்ளை இனத்தைச் சேர்ந்து ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் செருப்புகளைத் தைத்துக் கொடுத்தார்.

இத்துடனா இருந்தார்? தான் செய்த காலணிகளுக்கு 'அகிம்சா காலணிகள் என்று பெயர் சூட்டி - விற்பனைக்கும் அனுப்பினார் காந்தியடிகள்.

பள்ளிகளின் பாடத் திட்டத்தில், சமையல் செய்வதை, கழிவறைகளைக் கழுவுவதை, டாய்லெட் சுத்தம் செய்வதைப் பாடமாகச் சேர்ப்பதுடன், பிள்ளைகளுக்குப் பயிற்சியும் தர வேண்டும் என்று வாதாடினார்.

ஏனென்றால், பரிசுத்தம் இறைத் தொண்டுக்கு ஈடானது என்று நம்பினார். அதனால், தென்னாப்பிரிக்காவிலே இருந்து காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்தியடிகள், மாநாட்டின் கழிவறைகளை எல்லாம் சுத்தம் செய்தார்.

காந்தியடிகளின் இந்தத் தொண்டு, செயல், மாநாட்டை மட்டும் அல்ல, இந்தியாவையே, ஏன், உலகத்தையே பரபரப்பாக்கி விட்டது.

கழிவறைகளை ஏன் சுத்தம் செய்கிறேன் தெரியுமா? செருப்புகளைத்தைக்கிறேனே. ஏன் புரியுமா? முடிவெட்டியாகப் பணி செய்தேனே - எதற்கென அறிவீரா? சமையல் வேலைகளைச் செய்தது வேலையற்றவன் என்பதற்காகவா? சிந்தனை செய்தால் எனது உண்மை புரியும் - என்றார் காந்தியடிகள்.

52