பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


கோயிலுக்குள் தூங்குபவன் யார்? எவன்?

இந்தச் சிந்தனைச் சுழல்கள் அத்தனையும், காந்தியடிகளின் உள்ளத்திலே ரங்க ராட்டினமாகச் சுழன்று கொண்டே யிருந்தன.

கருப்பனுக்கு இவ்வளவு தெளிவு ஏற்பட்டு விட்டதே என்று 1947 -லேயும், அதற்கு முன்பும், வெள்ளையன், சிந்திக்க ஆரம்பித்தான்.

இந்தியர்களை இனி ஏமாற்ற முடியாது. அவர்கள் தங்கள் உயிர்களை, இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில் அலட்சியமாக வைத்துவிட்டு விளையாடுகிறார்கள்'

"நமது பூட்சு காலால் அந்த உயிர்களை நசுக்கும் போது கூட அவர்களுடைய உணர்ச்சி புதுத் தண்ணீரினால் வந்த ஜூரத்தால் பாதிக்கப்படுவானே மனிதன், அதனைப் போலக் கூடப் பாதிக்கப்படவில்லை"

வெள்ளையனுடைய ராஜதந்திரங்கள் - சாகசங்கள் - பிரித்தாலும் சூழ்ச்சிகள்-அடக்குமுறைகள்-துப்பாக்கித் துந்துபிகள் -இவையத்தனையும் கருப்பனுடைய கண்கள் முன்னால், மிகச் சிறியனவைகளாகவே தெரிந்தன.

இறுதியில், சாசனம் எழுதுவதற்காக - அதுவும் விடுதலை சாசனம் எழுதுவதற்காக - வெள்ளையனே துணிந்தான்.

"சுதந்திரத்தைத் தருகிறேன்" என்று வெள்ளையன் கூறினான்

"தராதே. நானே எடுத்துக் கொள்கிறேன்” என்று இந்தியன் சொன்னான்.

பிறப்பின் கட்டம், காந்தியடிகளைப் பொறுத்தவரை சிறிது சிறிதாக நெருங்கிக் கொண்டே இருந்தது. பிரச்சனைகளும் அதற்கேற்ப விளையாடின.

மணம் வீசிய பிறகு மலருக்கு வேலையில்லை, சுதந்திரம் வந்த பிறகு காந்தியடிகளுக்கும் இந்த மண்ணில் என்ன வேலை?

எப்படிக்காந்தியடிகளைக்கொடுத்ததோ-அப்படியே நாட்டு விடுதலைக்காக வாழ்வாங்கு வாழ்ந்து போராடிய அந்த மனித குல மாமேதையை எடுத்துக் கொண்டது - காலம்.

60