பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


அதனுடைய கூடு புதைக்கப்பட்ட இடம் வங்க கடற்கரை சதுக்கம்!
அந்த இரண்டு விண்மீன்களும் -
எழுத்தால், பேச்சால்,
சிந்தனையால், எண்ணத்தால்,
உழைப்பால், உரிமை பெறலால்,
இனத்தால், பண்பால்,
அன்பால், செயலால்,
மக்களிடையே சேகரித்துக்
கொண்ட செல்வாக்கால்
வருங்கால மக்களை
உருவாக்கும் விதையால் ஒன்றே என்பது.
நாடு அறிந்த ஒன்று.
அந்த நட்சத்திரங்கள் ஒளியுதறி நடமாடும் இடம் வானம்!
மனிதம் வென்றிட - அவை
புரட்சிக்கொடி ஏந்திய ஒளிச்சுடர்கள்!
அதோ-அந்த மீன்கள் மின்னலிடுகின்றன நோக்குக!

63