பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


கன்னல் தமிழ் இழுத்து,
தமிழை நீர் - நிமிரவைக்கப்
பாட்டெழுதிய - குயில் புள்ளே!
வரலாறு மறவா வடிவமே!

நிலவைத் திறந்துவிட - வானம் வரும்!
மலரைத் திறந்துவிட - தென்றல் வரும்!
பகலைத் திறந்துவிட - பரிதி வரும்!
எமது உணர்வைத் திறந்துவிட - நீ வருவாய்

சாப்பறவை, இந்தியை,
சந்தனத் தமிழெடுத்து, தமிழ்த் தீயில்,
இந்தனமாக்கிய இலக்கியக் குரவ,
உன்னோடு நாள் போயிற்றா?
இனிவரும் நாளெல்லாம்
தமிழ் இல்லா நொடிச் சினையா?

பார்த்திருந்த ஓவியத்தை,
பதம் குலையச் செய்ததெல்லாம்,
காலமெனில் -
அக்காலம் எமக்கு வேண்டாம்!
நடப்பதற்கே தெரியாத குழந்தைகள் - நாங்கள்!
நல்ல தமிழ் நடை கற்பித்த நயமான -ஆசான் நீ!

இடையன் கோவெடுத்தால் - அது, குத்துக்கோல்!
மன்னன் கோலெடுத்தால் - செங்கோல்!
குருடன் கோலெடுத்தால் - வழிக்கோல்!
ஆனால், மக்களுக்காக நீரெடுத்தக் கோல் - 'பா'க் கோல்!

பாவேந்தே - நீர்
அடுக்கிய எழுத்துக்களில் இருந்த மிடுக்கென்ன
கொடுத்த உவமையில் இருந்த உணர்வென்ன !
இனி, யார் எமக்கு அது போலத்
தரப் போகிறீர்கள்? யார் இருக்கிறார்கள்?

தோகை விரித்த தொகைக் கூட்டம்,
வெட்டுக்கிளிபோல் துள்ளி வந்த
வீரச் சொற்கள்! விநோத விளக்கங்கள்!

65