பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அய்யன் திருவள்ளுவரில்
ஓர் இராக மாலிகை
 

“அய்யன் திருவள்ளுவர்” எனும் இந்தப் பாமாலை பல்வேறு ராக மலர்களால் கவித்துவம் என்னும் நூலில் கோக்கப்பட்டிருக்கிறது. சுதி சுத்தமாக இருக்கிறது. தாளம் கணக்குத் தப்பவில்லை. இராகங்களுக்குரிய ஆரோக்ணம் - அவரோகணம்,ஸ்வரம் பிசகாமல் அமைத்து அடிநாதமாக விளங்குகிறது.

இந்த அய்யன் திருவள்ளுவர் என்ற பாமாலையில் - தமிழின் மோகனம், தமிழின் ஹம்சநாதம், தமிழின் கல்யாண வசந்தம், தமிழின் சாரமதி, தமிழின் சக்ரவாகம்... என்றெல்லாம் இனங்குறித்துச் சொல்லும்படி, பல்வேறு ராகங்களை - அவற்றின் ஆலாபனைகளை - செவிநுகர் கனிகளாக ஏற்றுச் சுவைத்து மகிழ்ந்தது போன்ற சுகானுபவம், பக்கத்திற்குப் பக்கம் நாம் வாசிக்கும் போது ஏற்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த திருவள்ளுவர் மாலையை இயற்றியிருக்கும் வித்தக விரல்கள், ஒர் உயரிய தமிழ் வித்துவானுக்குரியவையாக இருப்பதுதான். - -

என் மதிப்பிற்குரிய நண்பர் புலவர் திரு. கலைமணி அவர்கள், 'சொல்லாடல் என்னும் கலையில் வல்லவர் என்பதை, அவரது முந்தைய நூல்களைப் படித்து இன்புற்று உய்த்து உணர்ந்தவன் நான.

அவருக்கென்று ஒர் அற்புத தமிழ்நடை வசப்பட்டு - தகத்தகாயமாக ஒளிபரப்பி, வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெளிச்ச விழுதாகத் தொங்கி, வாசிப்பவரின் அறியாமை இருட்டை அறவே அகற்றுகிறது.

நான், நண்பர் கலைமணியின் நூல்களை எப்பவுமே மிகவும் ஆசையோடு படிப்பவன்.

ஓர் உரைநடை ஆசிரியர், கவிஞராக இருப்பது வியப்பில்லை. இருப்பினும் - அப்படி இருப்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல.

5