பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பனையோலைப் பள்ளத்தில்
படிக்குங்கால் கற்கண்டாகி, முக்கனிச் சாறாகி,
கேட்குங்கால், அவை பூச்செண்டாகி,
காதுகளிலே வீழ்ந்து - நின்று நிலைத்த தமிழகத்தில்,
தமிழுக்கும் - பண்பாட்டுக்கும் வந்தேறிய பகை -
ஆட்சித் தியிருடன் வழக்காட நினைத்தபோது,
பாவேந்தர் எப்படி'பா இயற்றினார் தெரியுமா?

கிழக்கைக் கீறி எழுந்த - செங்கதிர்போல -
எழுத்துக்களை எழுச்சியாக்கி,
அசையை அரிமாவாக்கி,
ஒலிக் குடும்பம் தனை ஒழுங்காக நிரவி,
பாட்டால் தன்னையே பரவ வைத்து,
பழங்காலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்ற காலக் கணக்கைக் கடந்து,
உடலில்லாமல்,போனாலும் உலவி,
உயிர்ப்பாய் நின்ற பழம் புலவர்களைப் போல -
புரட்சிப் பாடல்களை எழுதி, நமக்குப்
புத்துணர்வை ஊட்டியவர் பாவேந்தர்.

வெடிக்கும் எரிமலையை
வெங்காயத் தோல் போல் உரித்த,
நெடியால் - அந்த நொடிப் பொழுதில்
ஓரின எதிர்ப்பை அடி, முடி ஆடிட -
அதிர்ந்திட விழி நீரை வீழ்த்தும்
ஆற்றல் படைத்தவர் கவிக்கோ !

பிளந்த பூகம்பத்தைத் தனது பின்னி வரும்
சந்தத்தால் தைத்துப் பழக்கப்பட்ட
விந்தைக் கவிஞர் பாவேந்தர் !

புயற்காற்றை எடுத்து, அதற்கு
முயற் பொறுமை தந்து,
பாட்டு வயலிலே விளையாடவிட்டு
வேகவேடிக்கையைப் பார்த்த
புதுவை அரிமா அவர் !

69