பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


என்று கேட்டு, அவர் பெயருக்கு
இழிவு தேடினார்கள் - அழுக்காறாளர்கள்!
அத்தனை பேரையும் பாவேந்தர்,
இலக்கணக் களத்தில்
தன்னத் தனியராக எதிர்த்தே நின்றார்!
எனவே, பாவேந்தர் பாரதிதாசனாரை
வெளிச்சம் என்று நினைத்து,
ஆத்திகத் தேசிய விட்டில்கள்
குவிந்து வந்து விழுந்தன!
ஒளிக்கத் தெரியாதச் சூட்டால்
அவர்களைச் சாம்பலாக்கி விட்டார்.

தமிழின் மொத்தத்தில் குத்தகை எடுத்தக்
கவிதைக் காப்பியங்கள் பலவற்றை,
அறிவுச் சமுதாயத்திற்கு
அறிமுகப் படுத்தியவர் பாவேந்தர்.

கோடையில்கூட ஒடையில்
தண்ணீர் இருக்காது. ஆனால்,
புரட்சிக் கவியின் கவிதை ஓடையில்,
கோடை கூடக் கவிதை குடித்ததாக
உண்டு வரலாறு

பருவத்தில் பூக்கும் பூக்கள் உண்டு. ஆனால்,
பாவேந்தர் காலம் கடந்து எப்போதும்
பூக்கும் உவமைப் பூக்காடு!
சுதந்திரம் என்பதைப் பாரதி செய்தார்.
அந்தச் சுதந்திரத்தில் வாழும் மக்களைப்
படைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!

பொலிவற்ற கீழ் மேல் புரட்டுக்களை
நலிவு செய்வதில், அவர் பாண்டியன் வாள்!
ஒய்வெடுத்த வாழ்க்கையில் - ஒடுங்கும் மயிலாய்,
கைம்பெண் வாழ்வு கசந்து நிற்க,
நிலா முகத்தாளை வேர் பலா என்று கூறி,
பூரிக்கும் சுவை மகிழ்ச்சியால்
இளைஞர்களுக்கு

72