பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


மணித் துளியுமல்ல - காலண்டர் காட்டிய நாட் துளியுமல்ல!

மனித மூளையில் நினைவுச் சக்தி இருக்கின்ற வரையில், அவருடைய திருப்பெயர் எல்லோரா ஒவியம்போல் வண்ணம் கலையாமல் இருக்கின்றதென்றால், அதுவே மார்ட்டின் லூதர்கிங் அவர்களின் வாழ்நாள் அடையாளமாகும்.

பூண்டைவிடச் செடி உயரமானது! செடியைவிட மரம் உயரமானது. மரத்திற்குப் பக்கத்தில் மனிதன் ஒருவன்கூட உயரமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொன்றும் தனது வேரைப் பூமியில் நட்டு, வானத்தைப் பார்த்தாக வேண்டும்.

மரத்தினுடைய உயரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூண்டினுடைய உயரம் குட்டையென்று பெயராலே வந்தாலும் கூட - இரண்டும் வானத்தைத்தான் பார்த்தாக வேண்டும்.

உலகத்தில், எல்லாம் நிமிர்ந்து நிற்கவே - வேரைப் பூமியில் வைத்தான் - உச்சியை ஆகாயத்தில் வைத்தான் இயற்கை யோன்!

ஆனால், மனிதன் மட்டும் தனக்கு அருகில் இருப்பவனை, வேரை வானத்தில் வைத்து - நுனியைப் பூமி நோக்கச் செல்ல விடுவானேயானால், இயற்கைக்கு விரோதமாக நினைக் கின்றான். நடக்கின்றான் என்றே பொருள்.

ஒரு நீக்ரோ, பாதாளத்தில் விழ வேண்டிய கல்லும் அல்லன்ஒரு வெள்ளைக்காரன் வானத்தில் பறக்க வேண்டிய புறாவுமல்லன்.

இதற்கு எடுத்துக்காட்டான சம்பவம் தான், அமெரிக்க மாண்ட் கோமரியில் நடைபெற்ற ரோசா பர்க் என்ற கறுப்பின பெண் கைது செய்யப்பட்ட வரலாறு!

கறுப்பு இன மக்கள் பேருந்திலே பயணம் செய்தனர்! வெள்ளையர் ஏறி உள்ளே வந்தார்கள்!

எழுங்கள்! அமர இடம் கொடுங்கள் வெள்ளையர்களுக்கு! கட்டளையிட்டான் ஒட்டுநன் - வெள்ளையன்.

வீராங்கனை ரோசா பர்க் மறுத்தாள் கைது செய்தது அவளை - வெள்ளை ஆட்சி!

79