பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





விடுதலைக் குயில் பாரதியார்

ங்கு கரை இல்லாமல் கரை புரண்டு ஓடிவரும் மங்காத தமிழுணர்வில், மக்களின் அணுவெல்லாம் தேனினிக்கச்செய்யும் தொண்டு - தெய்வத் திருத் தொண்டு!

கூனிக் குறுகி இருந்தவர் நெஞ்சம் பொதிகையாய் நிமிர்ந்து, வான் படைத்த புகழை வாரி எதிர்காலத்தின் முகத்தில் எறிய வேண்டும்.

விடுதலை உரிமைக்கு வேக்காடு ஏற்பட்ட நேரத்தில், அதைப் பூக்காடாக்கப் புறப்பட்டவர் விடுதலைக் குயில் பாரதியார்!

குன்றிய உயர்வு - கடமையாற்றக் கூசிய நெஞ்சம் - அடிமைத் தனத்தின் காலடியில் வீழ்கின்ற பொருட்கள்!

மங்கியதைத் துவக்கி, துவண்டதை நிறுத்தி, மாறியதைப் புதுப்பித்து, பூரணப் பொலிவோடு தோற்றம் அளிக்கும் பணியில் ஈடுபட்டவர் மா கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்!

தமிழ் படித்த புலமை என்பதாலே - தரித்திரம் அவரைத் தலைகீழாகக் புரட்டி எடுத்ததோ! - என்னவோ!

“காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் - கதவை இழுத்து சாத்தடி' என்பதைப் போல, காசு இல்லாதவன் அறிஞனாக இருந்தாலென்ன? கவிஞனாக இருந்தால் என்ன?

உற்றமும்-சுற்றமும், பாரதியாரைப் பார்த்தவுடனே தங்களது கதவுக்கு இரட்டைத் தாளைப் போட்டன.

வா என்று அவரை வரவேற்கும் கைகள் மிகக் குறைவாகவே இருந்தன.

சமுதாயம், பொருளாதாரத் துறையில் கவிஞனைக் கேவலமாக மதித்த கடை கெட்ட காலம் அது!

97