கங்கு கரை இல்லாமல் கரை புரண்டு ஓடிவரும் மங்காத தமிழுணர்வில், மக்களின் அணுவெல்லாம் தேனினிக்கச்செய்யும் தொண்டு - தெய்வத் திருத் தொண்டு!
கூனிக் குறுகி இருந்தவர் நெஞ்சம் பொதிகையாய் நிமிர்ந்து, வான் படைத்த புகழை வாரி எதிர்காலத்தின் முகத்தில் எறிய வேண்டும்.
விடுதலை உரிமைக்கு வேக்காடு ஏற்பட்ட நேரத்தில், அதைப் பூக்காடாக்கப் புறப்பட்டவர் விடுதலைக் குயில் பாரதியார்!
குன்றிய உயர்வு - கடமையாற்றக் கூசிய நெஞ்சம் - அடிமைத் தனத்தின் காலடியில் வீழ்கின்ற பொருட்கள்!
மங்கியதைத் துவக்கி, துவண்டதை நிறுத்தி, மாறியதைப் புதுப்பித்து, பூரணப் பொலிவோடு தோற்றம் அளிக்கும் பணியில் ஈடுபட்டவர் மா கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்!
தமிழ் படித்த புலமை என்பதாலே - தரித்திரம் அவரைத் தலைகீழாகக் புரட்டி எடுத்ததோ! - என்னவோ!
“காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் - கதவை இழுத்து சாத்தடி' என்பதைப் போல, காசு இல்லாதவன் அறிஞனாக இருந்தாலென்ன? கவிஞனாக இருந்தால் என்ன?
உற்றமும்-சுற்றமும், பாரதியாரைப் பார்த்தவுடனே தங்களது கதவுக்கு இரட்டைத் தாளைப் போட்டன.
வா என்று அவரை வரவேற்கும் கைகள் மிகக் குறைவாகவே இருந்தன.
சமுதாயம், பொருளாதாரத் துறையில் கவிஞனைக் கேவலமாக மதித்த கடை கெட்ட காலம் அது!
97