பக்கம்:அரசியர் மூவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 அரசியர் மூவர்


"ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ” (2173)

'தாய் எனும் பெயர் என்னைத் தடுக்கவில்லை. அண்ணன் இராமன் கோபித்துக் கொள்வானே என அஞ்சுகிறேன். அதனால் தான் உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன் என்று பேசுகிறான் பரதன். அந்த நிலையிலும் கைகேயி வாய் திறக்கவேயில்லை.

இனி அனைவரும் இராமனை அழைத்து வருவதற்காகச் செல்லும்போது கைகேயியும் செல்கிறாள். குகனிடம் தன் தாய்மார் களை அறிமுகம் செய்து வைக்கின்ற பரதன், கைகேயியை அறிமுகம் செய்து வைக்கும்பொழுது,

"படர்.எலாம் படைத்தாளை பழி வளர்க்கும்
செவிலியை தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும்
உயிர் பாரம் குறைந்து தேய
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல்
இந் நின்றாள் என்னை ஈன்றாள்" (2371)

என்றெல்லாம் பேசுகின்றான். இந்த நிலையிலும் கைகேயி வாயைத் திறக்கவேயில்லை. இறுதியாக அவள் பேசிய பேச்சு பரதனிடம் 'வானத்தான், கானத்தான் என்று சொன்னாளே அதுதான். அதன் பிறகு அவள் வாயே திறக்கவில்லை என்பதை அறியும் போது கொஞ்சம் வியப்புத் தோன்றுகிறது.

மிக எளிதான முறையில் தன் கணவன், கொடுத்த வாக்கை மறந்து செய்ய இருந்த தவற்றிலிருந்து அவனைக் காப்பதற்காகத் தான் அதனைச் செய்தேன் என்று அவள் சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் பரதனோ, கோசலையோ யாருமே அவளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/68&oldid=1496558" இலிருந்து மீள்விக்கப்பட்டது