பக்கம்:அரசியர் மூவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் 67


குற்றம் சொல்வதற்கில்லை. அந்த நிலையில். அவள் ஏன் அதனைச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நினைக்கும் பொழுதுதான் அவளுடைய பெருமை நமக்குத் தெற்றென விளங்குகிறது.

இதனை அவள் சொல்லியிருப்பாளேயானால் தன்னைப் பழியிலிருந்து விலக்கிகொள்ளலாமே தவிர தசரதனுடைய புகழ் மங்கி யிருக்கும். அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் கைகேயி இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தாள். ஆகவே, வாய் திறந்து, வேண்டுமென்றே தான் செய்தேன். இதனை நான் செய்யாமல் இருந்திருப்பேனே ஆனால் தசரதன் வாய்மையும் மரபும் காத்தவனாக இருந்திருக்க மாட்டான் என்று சொல்லியிருப்பாளேயானால் மறு படியும் தசரதனுக்குப்பழி ஏற்பட வழிசெய்தவள் ஆகிவிடுவாள். ஆகவே, ஒரு கடுகளவு கூடக் கணவனுக்குப் பழி வராத முறையில் அவனைப் பாதுகாத்து அதன் காரணமாகத் தன்னையே தியாகம் செய்து கொண்டு வாய் திறவாமல் கடைசிவரை இருந்த பாத்திரமாக அமைகின்றாள் கைகேயி. இவளுடைய இந்த மாபெரும் தியாகத்தைப் பரதன் உணர்ச்சி வசப்பட்ட காரணித்தால் அறிந்து கொள்ள வில்லை. ஏனையோரைப் பற்றிக் கவலையேயில்லை. ஆனால், இராகவனைப் பொறுத்தமட்டில் நன்கு அறிந்து இருந்தான் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

இராகவனைப் பிள்ளையாகப் பெற்றுங்கூட, தசரதன் வீடு பேற்றை அடையக்கூடிய நிலையைப்பெறவில்லை. தேவர் உலகத்தில் தான் சென்று தங்குகின்றான்.

“சுமந்திரன்.இராகவன் கானகம் போயினன்” என்றான்;
என்ற போழ்தத்தே ஆவி போனான். (1898)

என்றுதான் கம்பன் கூறுகின்றானே தவிர, வீடுபேற்றை அடைந் தான் என்று சொல்லவில்லை. ஏன் தெரியுமா? மனத்திலே கைகேயி மாட்டுக்கொண்ட காழ்ப்புணர்ச்சியோடு இறுதிவரையிலும் தசரதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/69&oldid=1496560" இலிருந்து மீள்விக்கப்பட்டது