பக்கம்:அரசியர் மூவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ☐ அரசியர் மூவர்


இந்தக் கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் கொஞ்சம் வியப்பைத் தருவதாகவே அமைகின்றது. மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யா கல்கத்தை ஒரளவு மறைத்து, அதே நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக, ஸ்திதப்ரக்ஞையாக, கடமையை நிறைவேற்றுதற்காகப் பழி பாவங் களை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்து விடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

ஆகவே, 'இந்த அடிப்படையில்தான் அந்தப் பாத்திரத்தை அமைக்கின்றேன்' என்பதைச் சுட்டிக் காட்டுபவன் போல, அப் பாத்திரத்தை அறிமுகம் செய்கின்றபோதே மிக அற்புதமான முறையில் அறிமுகம் செய்து வைக்கிறான். மந்தரை வந்த பொழுது கைகேயி உறங்கிக்கொண்டிருக்கிறாள்.

"கடைக்கண் அளி பொழிய பொங்கு அனை
மேல் கிடந்தாள்” (1448)

என்று கைகேயியை முதல் முதலாக அறிமுகம் செய்வான் கம்பநாடன். உறங்கும்பொழுது ஒருவருடைய அக மனத்தில் என்ன எண்ணம் நிறைந்திருக்கிறதோ அதுதான் அவரது முகத்தில் வெளிப்படும். கைகேயி உறங்கிக்கொண்டிருந்தபோது அவள் கடைக்கண் வழி அருள் கரந்து கொண்டிருந்தது என்றால் அவளுடைய அகமனம், ஆழ்மணம், சிந்தை ஆகிய அனைத்திலும் அருள் நிரம்பி இருக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றான் கவிச் சக்கரவர்த்தி. இப்படி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள் நான்கிலும் அருள் நிறைந்திருப்பவளாகிய ஒருத்தி, எவ்வாறு கொடுமையான காரியத்தைச் செய்ய முடியும் என்று சிந்திப்போமேயானால் உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். கொடுமை என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கின்றதே தவிர, செயலில் இல்லை. இப்பொழுது அவள் வாய் திறவாமல் இருந்திருப்பாளேயானால் தசரதன் பழிக்கு ஆளாவான். வாய் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/72&oldid=1496711" இலிருந்து மீள்விக்கப்பட்டது