பக்கம்:அரசியர் மூவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் ☐ 75


உணர்ந்தான். உணர்ந்துவிட்டபிறகு இரண்டு வகையில் இராகவன் செயல்படக்கூடும்.

ஒன்று, தந்தை என்ற முறையில் உறவு வைத்துக்கொண்டு, தந்தையைப் பார்த்து, "தாங்கள் செய்வது அவ்வளவு சரியாக இல்லை. இப்பட்டம் பரதனுக்கே உரியது” என்று கூறி மறுத்திருக் கலாம். அது ஒருவகை. இராகவன் அவ்வாறு செய்யவில்லை. மறுத்துப் பேசுவதற்கும் தசரதன் வாய்ப்பே கொடுக்கவில்லை. எனவே அடுத்த வழி என்ன? “சக்கரவர்த்தியின் ஆணை எதுவோ அதனைக் கேள்வி கேட்டகாத முறையில் , (.....Yours is not to question why? but to do and Die') ஏற்றுக்கொள்வதுதான் மற்றொரு வகையாகும்.

“யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு”

என்ற இந்த இரண்டாவது வழியை மேற்கொள்கிறான்.

“யான் நின் வயின் பெறுவது ஈது”

என்று தந்தையோ கெஞ்சுகிறான். மகனோ 'கொற்றவன் ஏவியது' என்று சொல்லுகின்றான். இந்த இரண்டுக்குமுள்ள மாறுபாட்டை நன்கு சிந்தித்தல் வேண்டும்.

“யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு”

என்று நினைக்கின்றான் இராகவன். ஆகவே, தசரதன் வரம் கொடு என்று கெஞ்சினாலும், அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் 'சக்கரவர்த்தி தனக்கு ஆணையிட்டதாகவே நினைக்கின்றான் தசரத குமாரன். ஆகவே, கொற்றவனுடைய ஆணையை மீறுதல் என்பது யாருக்கும் இயலாத காரியம். அந்த முறையில் 'அது சரியோ, தவறோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் 'இது சக்கரவர்த்தியி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/77&oldid=1496739" இலிருந்து மீள்விக்கப்பட்டது