பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. அருணகிரிநாதர் (6) நஞ் செந்தின் மேய வள்ளி மளுளன்' -அப்பர் தேவாரம்-திருத்தாண்டகம் (மறைக்காடு) (xy) 81-பதும-திருச்செந்தூரிலும் வயலூர்க்குரு நாதனை மறவாது துதித்தார். - (xvi) 93-மூளும் வினை'-மெய்யடியார்கள் வாழும் இடத்தைத் தேடி வந்து அவர்களுடன் எம்பெருமான் விளை யாடுவார் என்பதை மாசி லடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே யங்ங்ணே நின்று வாழு மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே என மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார். (xvii) 66 கொம்பனையார்-'சங்கரி - சூரனெடெதிர் போர் கண்டு-எம் புதல்வா வாழி வாழி யெனும்படி விருன வேல் தர'-எனச் சூர சம்ஹாரத்துக்காகத் தேவி முருக ருக்கு வேல் கொடுத்ததாகக் கூறியுள்ளார். இது: 'அழியாப் பேரளி உமைக்க ணரின்று - தற்பெயர் புணர்த்திக் கற்பிைெடு கொடுத்த அமையா வென்றி யரத்தநெடு வேலோய்!” (கண் நின்று=எதிர் நின்று, தற்பெயர் புணர்த்தி=சக்தி யென்று தன் திருநாமஞ் சாத்தி; கற்பினெடு=சூரனை வெல் லென்று கற்பித்தலுடனே; அமையா வென்றி=ஒடுங்காத வென்றி, அரத்தம்=குருதி, ரத்தம்)-எனவரும் கல்லாடக் கருத்தினெடு ஒத்துளது. (63) சிவபுரத்துத் திருப்புகழில் (876) சிவனுகந்தருள் கூர்தரு வேல் விடு முருகோனேஎன்ருர். (பக்கம் 46 பார்க்க) (xviii) 98 விந்ததின்ஆறு திரு எழுத்தும் கூறுநிலை-கண்டு நின்தாள் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்எனக் கல்லாடத்திற் பெரியார் கூறியவாறு, சுவாமிகள் 'எந்தனுளேக செஞ்சுடராகி என் கணிலாடு தழல்வேனி எந்தையர்’ என்றது ஒர் அனுபவ உண்மையைக் காட்டுகின்றது.