பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 107 'இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்க '?' ႔ႏိုင္တူ## ಘೀ குரங்கு”-என்ருர் அநுமாரை. இலங்கையில், இலங்கிய=விளங்கின, இ(ல்)லங்களுள்'= விடுகளுள், இலங்கு அருள் இல் எங்கணும்=விளங்குகின்ற அருட் குணம் இல்லாத வீடுகள் எல்லாவற்றிலும், (ஏ! அக் னியே 1) இலங்கு=நீ இலங்குவாயாக (ஒளிவீசுக 1 எரிக )s. என=என்று, முறையோதி=ஆணையிட்டு, கனல் இடும் குரங்கு=நெருப்பிட்ட குரங்கு-என்பது பொருள். இந்த இலங்கைப் பட்டணத்தில் அருளில்லார் வீடுகளை எல்லாம் நீ எரித்து விடு என்று அக்கினி பகவானுக்குக் கூறி அவ்வூருக்கு. நெருப்பிட்ட குரங்கு11 பின்பு (150) இஞ்சிகுடியைத் (811) தரிசித்து, எங்கு நினைப்போர்கள் நேச சரவண ! சிந்துர கற்பூர ஆறு முககுக எந்தனுட்ைச் சாமிநாத வயலியி லுறைவேலா!' என அருமையாக ஆண்டவனைப் புகழ்ந்தார்; எங்கு நினைப் போர்கள் நேச என்றதல்ை எந்த தேசத்தில் இறைவனை நினைப்பினும் அங்ங்ணம் நினைப்போர்க்கு நேசன் முருகன்என்பது பெறப்படும். இது 2எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடி யார்க் கிங்கேயென் றருள் புரியும் எம்பெருமான்' எனவரும் பூநீ சம்பந்தர் தேவாரத்தை நினைவூட்டுகின்றது. இஞ்சி குடியைத் தரிசித்த பின்பு தாம் முன்னரே தரிசித்த சில தலங்களை மறுமுறை வணங்கி, (151) சக்கரப்பள்ளி (882), என்னும் தலத்துக்கு வந்தார். அடுத்துள்ள சுவாமி மலை யின் குருமூர்த்திக் கோலமும், வயலூரில் திருப்புகழ் பாடும் 1. கண்ணகி மதுரைக்கு நெருப்பிட்ட போது

பார்ப்பார் அறவேர்ர் பகிப்பத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க'

-ள்ன்று சிலப்பதிகாரத்தில் வருவதும் காண்க. 2. சம்பந்தர்-பிரமபுரம்-II-40-6.