பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அருணகிரிநாதர் முருகா! நான் மறவேன்'-எனக்கூறி மகிழ்ந்து நன்றி பாராட்டுதல்-(1132) 10. இறைவன் இறவாப்பதம்-அமுத பதத்தை தந்: தருளினதைப் பாராட்டியது (1240) 3 பிற விஷயங்களும் சில குறிப்புக்களும் 1. 1007: தசையும் உதிரமும்’ இப்பாடலில் நாலா வது அடி 'மறைகளின் இறுதி யறுதியிட அரிய பெறுதியை இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழி வாயே’ என்பது பூரீ சம்பந்த சுவாமிகள் திருவெழு கூற்றிருக்கையில் 'இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்* கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்’என்ற அடிகளின் கருத்தொடு இயைந்து நிற்பது அறி யத் தக்கது. 2. 1015: எழுபது வர்க்கக் குரங்கு-திருப் 515, 880 பார்க்க (பக்கம் 46). 3. 1019: (i) நவநாத சித்தர்கள் -சத்தியநாதர், சதோக நாதர், ஆதி நாதர், அதிை நாதர், வகுளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர்-எனப் ப்ரதான சித்தர் ஒன்பதின்மர். நவநாத சித் தர்களும் உன் நட்பினை விரும்புவார். (தாயு. மெளன. 7) (ii) முருகப் பிரமத்துக்கு அறிவும் அறியாமையும் கடந்த அறிவே திருமேனியாம். .." 4. 1025: முருகவேள் சம்பந்தராகத் தோன்றி மரபு நிலையாகத் தேவாரம் என்னும் பத்தி மிக இனிய ஞானப் பாடல்’களைப் பாடினர் என்பது. - 5. 1036: முருகவேளின் திருவடியே சொந்த ஊர், பெற்ற தாய், சுற்றம்-என்றது 'ஊர், பெற்றதாய், சுற்ற மா. யுற்றதாள்’’.