பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 15 20 25 சிட திருத்தணிகேசன் துணை அருணகிரிநாதர் போற்றி அகவல் (போற்றி 108) அருணைப் பதிவரும் அண்ணலே போற்றி தவஞ்சார் குலத்தவ தரித்தனை போற்றி புவிவாழ் வாழ்க்கை புண்தரும் என்று சோகமுற் றுயிரைத் துறக்க, அருணைக் கோபுரத் திருந்து குதித்த ஞான்று பூர்வ புண்ணியப் பூர்த்தியின் பயல்ை எம்மான் பெம்மான் எந்தை முருகல்ை ஆட்கொளப் பெற்ற அரசே போற்றி திருவடி தீவுை பெற்றனை போற்றி மெளைேப தேச மாண்பது பெற்றும், அருணகிரி நாத’ என் றழைக்கப் பெற்றும், கீரனை மீட்ட கிளர்வடி வேலால் நாவிற் சடாகூடிரம் நாட்டப் பெற்றும் ஞான உயர்நிலை நயந்தனை போற்றி 'முத்தித் தரு’ எனும் முதலடி முதல்வன் எடுத்துக் கொடுக்க எழிலார் பாக்கள் பதினு ருயிரம் பாடினை போற்றி அண்ணு மலையரும் உண்ணு முலையளும் திருநீ றளித்துச் செவ்வே புரக்கும்: தண்ணருள் பெற்ற புண்ணிய போற்றி மலநோய் மாண்டிட வள்ளியின் கரத்தால் திண்டப் பெற்ற ஆண்டகை போற்றி தலந்தொறும் சென்று சண்முகற் றுதித்து நலஞ்சார் பாடல் நவின்றன போற்றி திருவெணெய்ப் பதியில் திருநடங் கண்டு களித்துப் பாடிய கவிஞனே போற்றி