பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றி அகவல் 60 65 70 75 80 90 படிக்காசு பெற்ற பண்ப போற்றி கொடுங்குன் றத்துக் குமரன் ஆடிய நிர்த்த தரிசனம் நேரிற் காணும் மாதவப் பேறு வாய்ந்தனை போற்றி ஆவினன் குடிவாழ் அறுமுகன் அருளாற் செபமாலை பெற்ற திறத்தோய் போற்றி உனது பழநி ஊரைச் சேவித் தறியேன் இதுவரை அந்தோ என்று மனந்தடு மாற மலைமிசை ஏறி அனந்தம் பாடல் அருளினை போற்றி பழநி பழநி பழநி என்னும் அமுதப் பேரை அதுதினம் சொல்லி நெஞ்சே நற்கதி நேடிலே நீயென் நிடித்துக் கூதின எக்கன் :ோ ? பழநிப் பெருமான் படிவம் மறவாக் கவிசைச் சேவகன் கவிஞர் பத்தியை மெச்சி வியந்து நச்சினை போற்றி மதுரைப் பதியில் மதுரக் கவிகள் சிலபல பாடித் திருப்பரங் குன்றிற் செவ்வேள் மகிழத் திருப்புகழ் பாடிப் பரவிப் பணிந்த பரம போற்றி செந்துார்ப் பதியிற் சேய்கழல் பாடி முந்துளர் பத்தி முதிர்தரப் பெற்று நெஞ்சங் குளிர்ந்த நிமல போற்றி அத்தலந் தன்னில் அன்ருெரு தினத்தில் தன்கண் காணத் தனிமுதற் பெருமான் பால குமரன் பயில் திரு நடனம் கண்டு களித்த காதல போற்றி வாதுக் கழைத்து வண்டமிழ்ப் புலவர்க் கேதம் விளைத்த இயற்றமிழ்ப் புலவன் வில்லி என்னும் வல்லவன் திகைக்க அந்தாதி பாடி அரும்பொருள் கான முடியா வகையில் முடித்தொரு செய்யுளைக்