பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*14 அருணகிரிநாதர் தாம் பெற்ற ஞானநிலையின் பெருமையை வியப்பார்1. 1ாடுக எனத் தமக்குக் கட்டளையிட்டும், மலங்களைக் களைந் தும், தாம்பாடிய பாடல்களை மெச்சியும் உயர்ந்த பேற்றினைத் தமக்கு அளித்தருளிய முருகவேளின் கருணையை வியப் பார் 2. தாம் பெற்ற உபதேசச் சிறப்பால் மரணப் ப்ரமாத மும் ஒழிந்தது என மகிழ்வார்3. மடவார்பால் தமக்கிருந்த மயக்கு தொலைந்ததே, வீடுபேறு கைவந்ததே-என நன்றி பாராட்டுவார்4. ஊனக் கண்கொண்டு பெண்முகம் பார்த்து மகிழ்ந்த இப்பேதைக்கு ஞானக் கண்கொண்டு நின் வடிண்முகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்ன தவப் பேறு என வியப்பார்5. I 1 கரணமு மொழியத் தந்த ஞான மிருந்த வாறென்! - திருப்.960 -2 (a) எமது மலத்தைக் களைந்து, பாடென அருள, அதற் குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேற ருள் முருகோனே! -திருப்.792 (b) முன் அருணை நாடதில் ஒது திருப்புகழ் -திருப்.890 (c) குமர! மேன்மைத் திருப்புகழை ஒதற்கெனக் கருள் வோனே-திருப்.425 3 (a) கரண மாய்த்தெனை மரண மாற்றிய கருணைவார்த்தை யிருந்த_வாறென்’ -திருப்.1061 (b) மரணப் ப்ரமாதம் நமக்கில்லையாம் -கந்.அலங்.21 4 (a) கபடிகள்-இடையினும் நடையினும் அவமே யான் மயக்கமாய்ப் பொருள் வரும்வகை க்ருவழிபணு தடத்து மோகூடிம-தருளிய புலமலர்-மன்னத்த வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேன்ேட்-திருப்.344 (b) மடவார்பால்-ஏகாப்ப்ழி பூணு மருளற நீ தோற்றி முன்னுளு மடிமையை, யீடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே. -திருப்.360 (c) காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும் வருமோதான் -திருப்.426 15 நுசுப்பில் நகையில் முலையில் நுதலில் பொட்டில் விலைமா தர், மொழியில் அன்ன நடையில், கண்ணின் இனையில் கனி வாயில் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்மவசம் எப்படிக்கு ம்ற்வேனே. -திருப்.1189