பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாத்தா' என்ற முதிர்ந்த பட்டத்துக்கு உரியவர் இருவர். ஒருவர் டாக்டர் உ.வே.சா, மற்றொருவர் பேராசிரியர் மயிலை. சிவ முத்து.

பாவேந்தர் தமிழர்க்குச் சொத்துப்பாடல் இயற்றியவர்; இவர் முத்துப்பாடல் இயற்றியவர்.

தமிழுக்கு வாழ்ந்தவர்; இந்தியை எதிர்த்தவர்; தமிழாசிரியர் பணிக்குப் பெருமை சேர்த்தவர்; தள்ளாடும் பருவத்தில் தமிழால் நடந்தவர்.

தமிழே சிவம்! சிவமே தமிழ்!

பாவேந்தர் பற்றிய தம் பழுத்த அனுபவங்களை இக் கட்டுரை மூலம் நம் சிந்தனைக்கு விருந்தாக்கியிருக்கிறார்.