பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்'114




யாகக் குதிரையையும் இழுத்துக்கட்டி இராமனையும் எதிர்த்து வீழ்த்தினார்கள்’’என்று கூறினார்.கேட்டவர் வாயடைத்திருந்தனர். இது அவர் அஞ்சாமைக்குச் சான்று.

இப்படி எவ்வளவோ கூறலாமவரைப்பற்றி. வஞ்சனையறியா உள்ளம் படைத்தவர். அவரது பண்புகளில் பல நானறிய வாய்ப்பில்லை. ஆனால் நானறிந்த மட்டும்,அவர் ஓர் ஒப்பற்ற புரட்சிப் பாவேந்தர்,இலக்கியஉலகில் அவர் எவ்வளவோ அறிந்தவர். ஆனால் உலகியலில் அவர் எவ்வளவோ அறியாதவர்; அறியக் கவலைப்படாதவர். அதனால்தான் உலகியலும் உலகும் அழியுமட்டும் அவர் தமிழர் உள்ளத்தில் வாழவிருக்கிறார்.