பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/128



துப் பார்த்தேன். மேலும் தொடர்ந்து நடத்த என்னால் இயலாது என்பதை முடிவாக உணர்ந்துகொண்டநான் முருகு சுப்பிரமணியத்திடம் "விருப்பமானால் நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர்களாலும் இயலாது என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே இன்ப இரவு நாடகக்குழு கலைக்கப்பட்டது. கலைஞர்கள் தங்களுக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக ஊர் திரும்பினர்.

இந்த இன்ப இரவு நாடகம் நடத்தியதில் எனக்குப் பொருள் இழப்பு ஏற்பட்டாலும், கவிஞர் சுரதா, வேணு கோபால் சர்மா, ஞானமணி போன்றோரோடு நெருங்கிப் பழகும் நல்ல வாய்ப்பினைப் பெற்று மகிழ்ந்தேன். இவர்களுடைய மேதாவிலாசம் அப்பொழுதே எனக்குப் புலப்பட்டது. கவிஞர் சுரதாவுக்கு அப்போது இருபது வயதிருக்கும். சுறு சுறுப்பாகவும் துடிப்பாகவும் காணப்படுவார். அப்போதே கவிதை எழுதிக் கொண்டுவந்து பாவேந்தரிடம் காண்பிப்பார். பாட்டின் நுட்பத்தைப் படித்துணர்ந்த பாவேந்தர் 'சுரதாவுக்கு இணை சுரதாதான்’ என்று வாயாரப் பாராட்டியதை என் காதாரக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அப்போது கவிஞர் சுரதா எழுதிப் பாவேந்தரிடம் காட்டிப் பாராட்டுப் பெற்ற சிலவரிகள் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அவ்வரிகள் வருமாறு:

"தின்னும் இதழ் பூரிக்க நிலா முற்றத்தில்
சீக்கிரமாய்ப் போயமர்ந்தேன்; வஞ்சி வந்தே
என்ன அத்தான் ஊர்ச்சேதி? அம்மா அப்பா
எல்லாரும் நலந்தான?
"வேர்த்துப் புழுங்காத மார்கழியில் குளிருக்குப்
போர்த்துத்தான் வந்தது புத்தேடு.”

சரசுவதி திருமணம்:

இன்ப இரவு நாடக ஒத்திகை சென்னையில் நடந்து கொண்டிருந்தபோது, என் சொந்த அலுவல் காரண-