பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/132


அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/132

பாராட்டுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அன்று பெரியார் அவர்களை இடைவேளையில் பார்த்து ஏதாவது முத்தமிழ் நிலையத்துக்குப் பொருளுதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஊருக்குப் போய்க் கவனிப்பதாகச் சொன்னர்; 30-1-44 ஆம் தேதி தாம் சொன்னபடியே பாவேந்தர் முகவரிக்கு ரூ. 250/-க்குக் காசோலையொன்று அனுப்பிவைத்தார்.

பாரதிதாசன் நிதி:

1945ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 10ஆம் நாள். பாரதிதாசனுக்கு நிதி சேர்த்துக் கொடுக்கவேண்டும் என்ற நினைவு எனக்கு எதிர்பாராமல் திடீரென்று வந் தது. அந்த விபரத்தை என் நாமக்கல் நண்பர் கா. கருப் பணன் அவர்களிடம் சொன்னேன். செய்யலாம்’ என்று சொல்லி என் எண்ணத்திற்கு அவரும் ஆதரவு காட்டி ஞர். 25-2-1945 ஆம் நாள் நான் சென்னைக்குச் சென்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பார்த்து, பாரதிதாசன் அவர்களுக்கு நிதி சேர்த்து அளிக்க விரும்புவதாகச் சொல்லி, அவர்களது சம்மதத்தைக் கேட்டேன். அதற்குப் பெரியாரவர்கள் நல்ல காரியம்; ஆனால் என் பொறுப்பில் அதை வைத்துக்கொள்ள முடியாது. என்னாலான எல்லா உதவிகளையும் செய்கிறேன்" என்று கூறித் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். பெரியார் இவ்வாறு சொன்னதைக்கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன், பெறற்கரிய பேறு பெற்றதைப்போல.

மறுநாள் திருவாளர்கள் எஸ்.இராமநாதன், டாக்டர் . ஏ. கிருஷ்ணசாமி, எஸ். இலக்குமிரதன் பாரதி முதலியவர்களைக்கண்டு நிதிக்குழுவில் உறுப்பினர்களாக இருக்க ஒப்புதல் கேட்டேன்; அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். மற்றும் அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார், சேலம் கல்லூரி முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர் ஆகிய எல்லாருக்கும் குழுவில்