பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகன் ஆண்ட தகடூர் நாட்டு அரூரில் ஆசிரியர் பணிபுரியும் கவிஞர் மணிவேலர் குழந்தைக் கவிதையும் குமரர் கவிதையும் கைவரப் பெற்றவர். இனிக்கப் பேசும் தனித்தமிழ் நண்பர்; இலக்கிய ஆராய்ச்சி செய்து வருபவர்.

ஆங்கிலமேதை ஜான்சனோடு பாவேந்தரை இவர் ஒப்பிடும் அழகு படிக்கப் படிக்கச் சுவை பயக்கிறது. பாவேந்தரோடு தாம் பழகிய ஒருநாளை, இக்கட்டுரையில் திருநாளாக்கிக் காட்டியிருக்கிறார்.