பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/174



கவிதை பாடல் மிக எளிதே என நான் அன்று அறிந்து கொண்டேன்.

நான் தொகுத்து வைத்திருந்த குயில் தொகுதியைக் கையில் வாங்கியவுடன்'திரு. முருகரத்தினம் வாழ்க’என்ற எழுதிப்'பாரதிதாசன்’ என்று கையெழுத்திட்டு'23-2-64' என நாளும் இட்டனர் கவிஞர். அவர் வெளியிட்டு நான் தொகுத்து வைத்த குயிலிலும் என்னை வாழ்த்தி வரைந்த வாழ்த்திலும் அவர் இன்றும் என்னோடு வாழ்கிறார். அவர் வாழ்த்து நான் பெற்ற பட்டங்களுள் ஒன்றே எனக் கருதுகிறேன்.

1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவேந்தரிட மிருந்து அழைப்பு வந்தது. தியாகராய நகரிலுள்ள அவர் இல்லத்திற்கு நான் விரைந்து சென்றேன். பாவேந்தர் என்னிடம் இவ்வாறு கூறினார்."என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று பல ஊர்களிலிருந்து பலரும் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறர்கள். சென்னையில் கொண்டாட வேண்டும் என்று நாரணதுரைக் கண்ணன் வந்தார். எல்லாவற்றுக்கும் மேலாகச் சென்னையில் ஒரு நடு அமைப்பை ஏற்படுத்தித் தமிழ் நாடெங்கும் கொண்டாடுவதை ஒருங்கிணைக்கலாம். நீயே இங்கு அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டு நடத்து. மற்றவர்களுக்கு விழாக் கொண்டாடுவதற்கு அனுமதி கொடு. விழாச் செலவிற்கு எம்.ஆர். ராதாவைப் போய்ப்பார். அவர் கொடுப்பார். கொடுப் பதை வாங்கிக்கொள்’’

ஒரு புறம் பாவேந்தரின் நிலைக்கு இரங்கினேன்'தமிழகத்தின் மாபெருங் கவிஞர் தம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தமிழகம் அறியாத என் போன்ற இளைஞர்களையும் ஓய்ந்து ஒதுங்கி யோரையும் நம்பும் நிலை ஆகி விட்டதே என்பதே எனக்கு வருத்தம் தந்தது. தமிழகத்துத் தமிழ்த்தலைவர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடவேண்டிய விழாஇது.