பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/176



ஆம் ஆண்டாகிய அந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் Diploma in Anthropology என்ற தேர்வும் ஜுன் மாதத்தில் Diploma in Linguistic எழுதுவதற்கு என்னை தயார் செய்து கொண்டிருந்தேன்' அத்தேர்வுகளைக் கைவிடுவதா? அல்லது தேர்வுகளை முடித்துவிட்டு வந்து விழாப்பணியைப் பார்ப்பதாஎன்பது என் உள்ளத்தில் ஏற்பட்ட ஊசலாட்டம். என்தேர்வுப் பணிகளை முடித்துவிட்டு விழாப்பணியில் முழுமூச்சாக ஈடுபடுகிறேன் என்று கவிஞரிடமும் கூறிக் கொண்டேன். அவரும் அதற்கு உடன்பட்டார்.

நாரணதுரைக்கண்ணர் விழாவுக்கான சில முயற்சிகளை மேற்கொண்டிருந்திருக்கலாம். இந்நிலையில் திரு.ஈ.வி. கே. சம்பத்தவர்களிடம் “கவிஞருக்கு பிறந்தநாள் விழாக் கொண்டாட எண்ணம் கொண்டு விழாவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, தங்கள் ஒத்துழைப்புவேண்டும்’ என்று நண்பர் ஒருவர் வேண்டிக் கொண்டார் போலும். உடனே சம்பத்து கவிஞருக்கு விழா எடுக்க முன்னரும் சில முறைகள் முயற்சி மேற்கொண்டு நடைபெருது தோல்வியில் முடிந்தது. இனிமேல் யாரும் உதவி செய்யமாட்டார்கள். அவர் சும்மா இருக்கட்டும்’ என்று கூறிவிட்டார். இக்கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் கவிஞரிடம் சென்று அப்படியே கூறிவிட்டார். கவிஞருக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் வருத்தமும் ஏற்பட்டன போலும். சம்பத்தைக் கவிஞர் நல்லுள்ளத்தோடு நம்பிக்கொண் டிருந்தார். இவ்வாறு விழாமுயற்சிக்கு முதலிலே ஓர் இடி ஏற்பட்டது. இந்த ஏமாற்றத்தையே என் அண்ணுவுக்கு மடல் வழி எழுதி என்மீது குறைபட்டுக் கொண்டார் கவிஞர். விழா மத்தியக் குழு அமைப்பது பற்றிக் கவிஞர் குறிப்பிட்டுவிட்டு; "இதை நம்தம்பி முருகரத்


இக்கடிதம் பாவேந்தர் நினைவுகள்’ என்னும் இந்நூலின் முதற்பகுதியில பககம் 124 - 125 இல் வெளியிடப்பட்டுள்ளது.