பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/14


அவரிடம் வேலைக்கு இருக்க மாட்டார்கள். நான் அடக்க மாகவும் அமைதியாகவும் நல்ல முறையிலும் அவரிடம் நடந்து கொண்டேன்.

என் கையெழுத்து அவருக்கு மிகவும் பிடிக்கும். பாண்டியன் பரிசை மூன்று முறை நான் படியெடுத்துக் கொடுத்தேன். பாவேந்தர் தாம் எழுதும் பாடல்களுக்கு முதலிலேயே தலைப்புக் கொடுக்கும் வழக்கமில்லை. அவர் எழுதிப் போட்ட பாடல்களைக் கையில் எடுத்து, "இப் பாட்டுக்கு என்ன தலைப்பு?’’ என்று அவரைக் கேட்டால் "நீயே ஒரு தலைப்பு வையேன்!” என்பார். காதல் நினைவுகள் தொகுதியில் உள்ள "ஒரே குறை” என்ற தலைப்பு பொன்னி ஆசிரியர் முருகுசுப்பிரமணியம் வைத்த தலைப்பு. 'குடும்ப விளக்கு' நான் சொன்ன தலைப்பாகும்.

வளர்ந்து புகழேணியின் உச்சியில் இருக்கும் சிலர் வளரும் நிலையில் இருப்பவரை ஊக்குவிப்பது மிக அருமை. ஆனல் பாவேந்தர் அதற்கு நேர்மாறானவர். நான் எழுதிய கவிதைகள் சிலவற்றை வேறொருவர் பெயர் போட்டு முதலில் அவரிடம் காட்டினேன். அவற்றைப் படித்துவிட்டு 'நல்லாருக்கு... பக்குவப்பட்டவன் எழுதற கவிதை போல இருக்கு’ என்று சொன்னர். அப்பாராட்டு எனக்கு ஒரு ‘டானிக்’ மாதிரி இருந்தது. அப்பாடல்களை எழுதியவன் நான்தான் என்பதை அறிந்த பிறகு, 'விடாதே எழுது ஆறுமுக நாவலரை விட உனக்கு ஆற்றல் அதிகம் இருக்கு!’ என்று பாராட்டினார். என்னை ஏன் அவ்வாறு அவர் பாராட்டினர் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை.

பாரதிதாசன் என்ற புனை பெயரைத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் கேலி செய்வது வழக்கம். அவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரிசாமி குறிப்பிடத்தக்கவர். பாரதி ஒரு பார்ப்பனர். மேலும் தாசன்’ என்பது வடசொல். பாரதிதாசன் என்றால் பாரதிக்கு