பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15/மார்கழியின் உச்சியில்


அடிமை என்றல்லவா பொருள்? என்று சிலர் அவரைக் கேட்பதுண்டு. அதற்குப் பாவேந்தர் ஆமாண்டா! நான் பாரதிக்கு அடிமை தான்!” என்று சட்டென்று கூறுவார்.

பாரதிதாசன் என்ற பெயர் நாட்டில் விளம்பரமாகத் தொடங்கியதும், அப்பெயரைப் பின்பற்றித் 'தாசன் தாசன்’ என்று கவிஞர்கள் புனைபெயர் வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. என்னையும் அவ்வாசை பற்றிக் கொண்டது. ஒரு நாள் ஒரு பாடலே எழுதி அதன் கீழே சுப்புரத்தினதாசன் என்று கையெழுத்திட்டிருந்தேன். அதைப்பார்த்ததும் 'ஏம்ப்பா இதெல்லாம்?’ என்றார். இவ்வாறு சொன்னாலும் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். பிறகு நான் அவருக்குக் கடிதம் எழுதும் போதெல்லாம் சுப்புரத்தினதாசன் என்றே கையெழுத்திட்டு எழுதுவது வழக்கம். ஒருமுறை கடிதம் எழுதிய போது, முழுப்பெயரையும் எழுதுவதற்குக் கீழே இடமில்லை. சு.ர.தா. என்று சுருக்கமாக எழுதினேன். பிறகு அந்த ஆணிகளைப் பிடுங்கி விட்டுச் 'சுரதா" என்றே கையெழுத்திட ஆரம்பித்தேன். அப்பெயரே எனக்கு நிலைத்து விட்டது.

பாவேந்தருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு நான்கு ஆண்டுகள் நீடித்தது. புதுவையிலும் எங்கள் ஊரிலுமாக என் வாழ்க்கை கழிந்தது. கவிதைத்துறையில் ஈடுபாடும், ஆற்றலும் என்னிடத்தில் வளர்ச்சி பெற்றன. பாவேந்தர் தொடர்பால் என் படைப்பாற்றல் கூர்மை பெற்றது. 1944-ஆம் ஆண்டு பாவேந்தர் 'இன்ப இரவு' என்ற நாடகக் குழுவை நிறுவினர். நாமக்கல் செல்லப்ப ரெட்டியாரும், பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியமும், பெரியண்ணனும், பாவேந்தருக்கு உறுதுணையாக இருந்து இன்ப இரவு நாடகக் குழுவைப் பொறுப்பேற்று நடத்தினர். பாவேந்தர் படைப்பில் உள்ள இயல் இசை நாடகப் பகுதிகள் இன்ப இரவில் இடம்பெற்றன. இசையமைப்பாளராகிய ஞானமணி-