பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/20


இதை பாரதியார் முன்னாலயும் பெரியார் முன்னாலயுந்தா குடிக்க மாட்டேன்! இந்த இரண்டுபேர் தவிர எவர் முன்னாலும் என் சிகரெட்ட நா மறைச்சது கிடையாது. ஏன்னா...... இரண்டு பேரும் ரொம்பப் பெரியவங்க. பாரதி போயிட்டார். இவர் இருக்கிறார்!’’ என்று கூறினர்.

பாவேந்தர் ஒருவர் தாம் பாரதியின் பரம்பரை. ஆனல் பாவேந்தருக்குப் பின் ஒரு பெருங்கூட்டமே உண்டு. பாரதியை விடப் பாவேந்தர், தமிழை முறையாகப் பயின்றவர்; அழுத்தமான புலமையுடையவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு தனித்துறையைத் தமிழக அரசு நிறுவ வேண்டும். படைப்பாற்றலும் பன்மொழிப் பயிற்சியும் மிக்கவர்களைக் கொண்டு பாவேந்தர் கவிதைகளை மொழி பெயர்த்து உலகில் பரப்ப வேண்டும். அதுதான் பாவேந்தருக்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்.