பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/28


கட்சிவளர்ந்திருக்கவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் மட்டுமே காங்கிரசின் கொள்கைகளை ஆதரித்து, அதில் சேர்ந்திருந்தனர் அவர்களில் முக்கியமான ஒருவர் அன்சாரி துரையாவார். இவர் மாநாடு நடைபெற இருந்த அன்று காலை சிறுவர்கள் சிலருக்குக் காசு கொடுத்து, பெரியாரே! திரும்பிப் போ?' என்று கத்தும்படி செய்திருந்தார். தன்மான இயக்க மாநாடு புதுவை ஒதியன் சாலையில் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிற்று. கூட்டம் மிகுதியாக இருந்தது. வெள்ளையன் ஒருவன் தலைமையிலிருந்த புதுவைக் காவல் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மாநாட்டிற்குக் கவியரசர் தலைமை வகித்தார். அறிஞர் அண்ணாவும், புதுவை அவோக்கா பெருமாள், நோயேல் போன்றவர்களும் வந்திருந்தனர்.

பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் கைவரிசையைக் காட்டத்தொடங்கினர். கொட்டகையில் ஒரே கூச்சல்; குழப்பம்! கற்கள் தகரக் கொட்டகை மீது வீசப்பட்டன! பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் படைத் தலைமை அதிகாரி, வெள்ளைத் தலைமை அதிகாரியிடம் 'இக்கூட்டம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும்’ என்று நயவஞ்சகமாகக் கூறியிருந்தார். அதனால், காவல் படையினரின் காப்பு பயனளிக்கவில்லை! காலிகளின் கைகள் ஓங்கின! காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி போன்று. இம்மாநாடும் தங்களை எதிர்க்கும் கூட்டம் என்று எண்ணி வெள்ளை அதிகாரிகள் கண்காணிப்பை அசட்டை செய்து விட்டனர்.

மாநாடு காலையில் சிறப்புடன் நடைபெறாமல் தடைப்பட்டது. தலைவர்கள் கலைந்து பெருமாள் அவோக்கா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அதுபோது பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சிலரும். அவர்