பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/32


போது, எதார்த்தம் பொன்னுசாமி, ஏ.கே. வேலன், மற்றும் திருச்சி நண்பர்கள் பலர் முயன்று, திருச்சி தேவர் மன்றத்தில் கவிஞரின் அறுபதாம் ஆண்டுவிழா வினைச் சீரும் சிறப்புமாக நடத்த முன்வந்தனர். அதுவும் பலகாரணங்களால் தடைப்பட்டுவிட்டது.

மீண்டும் அதைத் திருவானைக்காவலில் உள்ள சத்திரம் ஒன்றில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. காதல் ஆசிரியர் அரு. ராமநாதன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம் தலையிட்டு, அவ்விழாவை அங்குச் சிறப்புடன் நடத்திமுடித்தனர்.

திருவானைக்காவலில் பொன்னி இதழின் உரிமையாளர் அரு. பெரியண்ணனும், இந்நாள் புதுவைச் சட்டமன்ற உறுப்பினர் முத்தியாலுப் பேட்டை முருகையனும், நானும் கவியரசர் குடும்பத்துடன் இருந்து வந்தோம். கவியரசரோடு கருத்து வேறுபட்டுப் பகைத்திருந்த காலஞ்சென்ற துரைசாமிப் பண்டிதரின் இல்வாழ்க்கைத் துணைவியாரும் அப்போது எங்களுடன் இருந்து வந்தார்கள். அங்கேதான் கவியரசர் ஒரு வழிகாட்டியாவார் என்பதை நான் கண்ணுரக்கண்டு மகிழ்ந்தேன். பகைவர் மனைவி என்று சிறிதும் எண்ணாமல், பண்போடும் பாசத்தோடும் கவியரசர் குடும்பமே அந்த அம்மையாரை ஏற்று உபசரித்து வந்தது.

அப்போது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த "பொன்னி’ இதழ் கவியரசரின் அறுபதாம் ஆண்டுவிழா மலர் ஒன்றை வெளியிட்டது. கவிபாரதியாரோ தம்பரம் பரை என்று பாரதிதாசன் ஒருவரையே உருவாக்கினார். பாவேந்தர் பாரதிதாசரோ 'பாரதிதாசன் பரம்பரை' என ஒருபெரும் கூட்டத்தையே உருவாக்கிக்காட்டினார். அப்பரம்பரையைப் புகைப்படத்தோடு வெளியிட்டு

அறிமுகப்படுத்திய சிறப்பு அந்தப் 'பொன்னி’ இதழையே சாரும்.