பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39/முழுமதியனையார்



அவருக்குள்ள புனைபெயராகிய 'பாரதிதாசன்’ என்பதைக் கொண்டு, அவர் தேசியகவி பாரதியாரிடம் தமிழ் பயின்றவர் என்றும், கவிதை எழுதக் கற்றுக்கொண்டவர் என்றும், பாரதியாரின் மாணவர்என்றும் சிலர் கூறி வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இது முற்றிலும் தவறு.

திரு. பாரதிதாசனவர்கள் தேசியகவி பாரதியாரோடு தொடர்புகொள்வதற்கு முன்பே, இலக்கிய இலக்கணங்களில் புலமை எய்தியிருந்ததோடு பாட்டு எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தவராவார். அவர் தமிழ் கற்றது, சாரம் மகாவித்துவான் திரு.பு.ஆ.பெரியசாமிப்பிள்ளையவர்களிடமும், கல்வே காலேஜ் தமிழ்ப்பண்டிதர் திரு. பங்காருப் பத்தர் அவர்களிடமுமேயாகும்.

அப்பொழுதெல்லாம் திரு. பாரதிதாசன் அவர்களுடைய பாடல், எளிய நடையில் இராது. கடுநடை என்பார்களே, அந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கும். 'சுப்பு ரத்தின வாத்தியார் பாட்டா? அது கடுந்தமிழிலல்லவா இருக்கும்!’ என்று பலர் கூற, நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சியினரின் கெடுபிடிக்காளாகிப் புதுவையில் தஞ்சமடைந்த அரவிந்தர், வ.வே. சு. அய்யர், சுப்பிரமணியபாரதியார் போன்றவர்கட்கும், புதுவையிலுள்ள தேசிய உணர்வுகொண்ட பலர் ஆதரவாக இருந்து வந்தனர். அவர்களுள் ஒருவர்தாம் திரு. பாரதிதாசன் அவர்களும்.

இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல், நாளடைவில் திரு. பாரதிதாசனவர்கள் தேசியகவிபாரதியாரோடேயே நெருங்கிப் பழகலானுர். ஏனெனில், இவரும் கவிஞர்; அவரும் கவிஞர். இதுமட்டுமல்ல அவர்கள் நெருங்கிப் பழகியதற்கு காரணம், மற்றவர்களைக் காட்டிலும், சமத்-