பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/58



அருகிலே நின்று கொண்டிருந்த எங்கள் தாத்தா ‘எந்திரிடா மடையா? முருகன் என்னடா செய்வான்?’ என்று சொன்னாராம். இதை என் தந்தையார் கூறும் போதெல்லாம் நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம்.

புதுவைக் கல்வே கல்லூரியின் எதிரில் மயிலம் சுப்பிரமணிய மடத்தார் ஒரு திண்ணைப்பள்ளிக்கூடம் நடத்தி வந்தனர். அத்திண்ணைப் பள்ளியில்தான் என் தந்தையார் தொடக்கக் கல்வி பயின்றார். திருவாளர் திருப்புளிசாமி ஐயா அப்பள்ளியின் ஆசிரியர்.

கல்வே கல்லூரியில் முதல் வகுப்பிலிருந்து பி.ஏ. பட்ட வகுப்புவரை கற்றுக் கொடுக்கின்றனர். தமிழகத்துக் கல்லூரிகளில்,ஆங்கிலத்துக்கு உள்ள சிறப்பிடம் அங்கு பிரெஞ்சு மொழிக்குண்டு. தமிழ்ப் புலவர்களுக்கென்று புதுவை'அரசாங்கம் அந்நாளில் 'பிரவே-தமிழ்’ என்று ஒரு தேர்வுநடத்திவந்தது. கல்வே கல்லூரியில் ஈராண்டு பயின்று அத்தேர்வு எழுதவேண்டும். என் தந்தையாரும் அக்கல்லூரியில் பயின்று அத்தேர்வு எழுதி முதல்வராக வெற்றி பெற்றார்.

கல்வே கல்லூரியில் இவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புலவர் பங்காரு பத்தர் இவருக்குத் தமிழ் பயிற்றும் பேராசிரியராக விளக்கினார். ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரான சாரம் மகாவித்துவான் பு.ஆ. பெரியசாமி பிள்ளையிடம் இலக்கிய இலக்கணத்தோடு வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களையும் பயின்றார்.

என் தந்தையாருக்குத் திருமணம் உறுதிசெய்யப்பட்ட வுடன் புதுவை அரசு அவர்மீது ஒரு பொய் வழக்குப் போட்டுச் சிறையில் தள்ளிவிட்டது. எங்கள் தாய்ப் பாட்டன் பெயர் பரதேசியார்; பாட்டி பெயர் காமாட்சி அம்மாள். தென்ஆர்க்காடு மாவட்டத்தில் பெண்ணை ஆற்றுக்கு வடகரையில் உள்ள புவனகிரிப் பெருமாத்தூர் இவர்கள் சொந்தவூர்.திருமணம் உறுதியானபிறகு என் தந்தையார் சிறைக்குச் செல்வதைக் கண்டு என்