பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/64



கக்கூடாது. திறந்தால் அன்று வீடு தலையாலங்கானந்தான்.

இன்றையப் பேச்சாளர்கள் கூட்டத்திற்காக வெளியூர் சென்றால் ஆயிரம் ஐநூறு என்று வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். அன்றைய நிலை அப்படியில்லை. என் தந்தையார் கூட்டங்களுக்கு அயலூர் சென்று விட்டு வெறுங்கையோடு திரும்புவதுண்டு; சில நாட்களில் கைப்பணத்தைச் செலவு செய்துவிட்டு வருவதுண்டு. ஆகையால் அவர் கூட்டத்துக்குப் போகிறேன் என்று சொன்னால் என் தாயாருக்குக் குலைநடுங்கும்; தப்புத்திப்பென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து தமது வெறுப்பை வெளிப்படுத்துவார். தம்மிடம் எங்கு பணம் கேட்டுவிடுவாரோ என்று என் தாயாருக்கு அச்சம். இதைக் குறிப்பால் அறிந்துகொண்டு என்னை அருகில் அழைப்பார் என் தந்தையார். "ஏம்மா! சீப்பை எடுத்து ஒளிச்சுவைச்சுட்டா கல்யாணம் நின்னுடும்னு உங்கம்மா நினைக்கறா!” என்று கூறுவார் நான் கையை நீட்டுவேன். வளையலைக் கழற்றி விற்று எடுத்துக் கொண்டு கூட்டத்துக்குப் போய்விடுவார். 1930ஆம் ஆண்டில் நான் பத்து வயதுப்பெண். அப்போது என் தந்தையார் ஒரு தீவிர தேசியவாதி. காங்கிரஸ் மீதும் கதர்மீதும் அவருக்கு அளவுகடந்த பற்று. கதர்த்துணியைத் தோளில் சுமந்துகொண்டு தெருத்தெருவாகச் சென்று விற்று வருவார். வீட்டில் நாங்கள் எல்லாரும் அணிவது கதராடைதான். என் தாயார் அப்போது கழுத்தில் அணிந்திருந்த பத்துபவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் தாம் எழுதிய ‘கதர் இராட்டினப் பாட்டு’ நூலை வெளியிட்டார். நாங்களே அந்நூலைத் தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பினோம்.

கைச்செலவுக்குப் பணமில்லாத நேரத்தில் அவருக்குக் காரணமில்லாமல் கோபம் வரும். ஒரு முறை என் தாயார் ஓராண்டுக்குத் தேவையான புளியை வாங்கி இரண்டு பானைகளில் நிரப்பி வைத்திருந்தார். அவற்-