பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

Ο

மறைமலையடிகளின் மகளார் நீலாம்பிகை அம்மையார் தம் தந்தையைப்போல் எழுத்தாற்றல் பெற்றவர். பாவேந்தரின் புதல்வியருள் எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்றவர் இவரே!

பாவேந்தரின் வாழ்க்கை வானில் நாள்தோறும் பளிச்சிட்ட வரலாற்று மின்னல்களை, இவர் வரைகோட்டுப் படமாக்கி அடிக்கடி செய்தித்தாள்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சுவையான நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுத்துச் சுவையாகச் சொல்லும் ஆற்றல் இயல்பாகவே இவரிடம் அமைந்திருக்கிறது. இக்கட்டுரையில் தம் தந்தையாரைப் பற்றிய சில செய்திகளை நினைவுபடுத்திக் கூறியுள்ளார்.

Ο