பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87/அச்சம்- அவர் அறியாதது



அமைதியானமுறையில் நடைபெறத் திட்டம் வகுத்திருந்தார். அவரே வீதி வீதியாய்ச் சென்று ஏற்பாடுகளைக் கவனித்தார்.

“ஊர்வலம் செல்வதற்குப் போலீஸ்
 வழங்கிய ஆணையில் சில வீதிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் அந்த வீதிகளில்தான் போக வேண்டும்."

-காவல் துறை அதிகாரி இப்படி எச்சரித்தார்.

" அப்படியே செய்வோம்’ என்று கூறிவிட்டு ஒரு சிற்றுண்டி விடுதி நோக்கிச் சென்றார் பாவேந்தர்.

"நீங்கள் விதிமுறையை மீறி இப்போது போகிறீர்கள்.” என்று மறுபடியும் சற்றுக் கண்டிப்பாகக் கூறிய அதிகாரி, தந்தையாரின் எதிரில் போய் நின்றார்.

பாவேத்தர் சொன்னார்: நான் வீதியில் நடக்கவும் கூடாதா?

அதிகாரி: நீங்கள் நடக்கிறீர்கள்...உங்களின் பின்னால் சில ஆயிரம்பேர் வருகிறார்களே?

பாவேந்தர்: அதற்கு நானென்ன செய்வது?

அதிகாரி: இது ஒர் ஊர்வலமாகிவிட்டது என்கிறேன் நான்.

பாவேந்தர்: ஊரிலிருக்கின்ற அத்தனை கடைகளும், நிறுவனங்களும் சாத்தப்பட்டிருக்கையில் ஒரே ஓர் ஒட்டல் மட்டும் திறந்திருப்பதைப் பார்க்க வருகிறார்கள் மக்கள்...

அதிகாரி. நீங்கள் இந்தப் பகுதியிலிருந்து போய் விட்டால் மக்கள் கூட்டம் கலைந்து போய்விடும்.