பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/88



பாவேந்தர்: நாள் ஒன்று சொல்கிறேன்...இந்த ஒரே ஒரு கடையும் மூடப்பட்டு விட்டால் மக்கள் கூட்டம் கலைந்துவிடும்.

அதிகாரி: கடையைத் திறந்து வைத்திருப்பது தனியொருவரின் விருப்பம்.

பாவேந்தர்: அப்படியானால் தெருவில் நடப்பதும் தனியொருவரின் விருப்பம்.

காவல்துறை அதிகாரியுடன் கவிஞர் ஏதோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள், ஏதோ நடக்கப் போகிறது என்று கருதி இவர்களைச் சூழ்கிறார்கள்.

காவல் அதிகாரி இவரிடம் முறையின்றிப் பேச்சுக் கொடுத்துவிட்டதை உணர்கிறார். கவிஞர்பால் அந்த அதிகாரிக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் அவருக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமே!

அவர் இதை யோசித்துக் கொண்டிருக்கையில், "ஏம்பா..." என்ற இடிக்குரலை எழுப்பிச் சிற்றுண்டி விடுதியில் நுழைகிறார் பாவேந்தர்.

கடை உரிமையாளர் கவிஞரின் நண்பர்தான்.

அவர் கேட்கிறார்: "நான் கடையை மூடிவிட்டால்... தேவிகுளம் பீர்மேடு பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து விடுமா அரசாங்கம்? சொல்லேன் சுப்பு!”

பாவேந்தருக்குச் சினம் பொங்கிவிட்டது.

அடாவடிப் பேச்சன்றோ இது?

"நீயா சாத்தின கிடைக்காது, நாங்க கேட்கிற உரிமை!